Thursday 10 September 2015

கருத்து வேறுபாடு...!!


   இன்றைய சூழலில் ,இயக்கங்களாயினும்,கட்சிகளாயினும்,ஏன் குடும்பங்களாயினும்,கருத்து வேறுபாடுகளென்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.கருத்து வேறுபாடுகளென்பது வரமா !?சாபமா!? என்பதைச் சிந்திப்பதை விட்டுட்டு ,எதார்தமானது என்பதனை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

      ஏனென்றால் ஒரே தாய் ,தந்தைக்குப் பிறந்து வளர்ந்தாலும் வெவ்வேறு சிந்தனைக் கொண்டவர்களாகவே நாம் உள்ளோம்.அப்படி இருக்கையில் வெவ்வேறு குடும்பங்களாக ,வெவ்வேறு சமூகச் சூழலாக வாழ்ந்த,வாழுபவர்களிடம் கருத்து வேறுபாடுகள் எப்படி இல்லாமல் போகும்.ஒவ்வொருவரின் கைரேகைப் போலவே,ஒவ்வொருவரின் எண்ணங்களும் வெவ்வேறானவைகள்.கீ.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் .இவ்வாறாக "கருத்து வேறுபாடு என்பது வேறு.கருத்து முரண்பாடு "என்பது வேறென்று.ஆம் ,வேறுபாட்டையும் ,முரண்பாட்டையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.ஒரு ஊருக்கு நாம் செல்ல வேண்டும்,அதற்கு நாம் பேருந்தில் போக முடிவெடுக்கிறோமென்றால்,கூட வருபவர் ரயிலில் போவோமென்றால் ,இதுதான் கருத்து வேறுபாடு இருவரும்,அவ்வூருக்குப் போக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருவருக்கும் இல்லை,ஆனால் எதில் போகனும் என்பதில் தான் கருத்து வேறுபாடு.அவ்வூருக்கு போகவே கூடாதென்றால் அதுதான் கருத்து முரண்பாடு.

       சரி !கருத்து வேறுபாட்டினை எப்படிக் களையலாம்!?தான் கொண்ட கருத்து தான் சிறந்தது என்று எண்ணும் எண்ணத்தினை மாற்றிட வேண்டும்.எதிரணியின் கருத்தினையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.அக்கருத்தினில் உண்மை இருக்குமானால் ,மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மையும் நம்மிடையே வேண்டும்.ஏனென்றால் சிறுவயதில் நிலா நம்முடன் வருவதாக எண்ணி குதூகலித்த காலமும் உண்டு.பின்னாளில்தான் நாம் உணர்ந்தோம்,நிலாவைப் பார்த்துக் கொண்டேதான் நாம் நடந்தோம் என்பதை.சில காலம் கழித்து நாம் உணரலாம்,மாற்றுக் கருத்துடையவரின் கருத்து சரிதான் என்று.இலையில் தேங்கி இருக்கும் ஓர் துளியினை ஒருவர் 
மழைத்துளி எனலாம் ,மற்றவர் பனித்துளி எனலாம்.மழையா !?பனியா !?என இருவரும் சண்டையிடாமல்,"துளி" என்று இருவரும் கொண்ட ஒத்தக் கருத்தில் ஒன்றிணையலாமே.....!!!

      

No comments:

Post a Comment