Monday 12 October 2015

கலங்கிடத் தேவையில்லை...!!


     "இந்தியா எங்கள் தாய் நாடு!இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள்!என் தாய்த் திருநாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்......""என பள்ளிக்கூடத்தில் உறுதி மொழி எடுக்கையில் ,நெஞ்சில் ஓர் இனம்புரியாத சந்தோசமும் ,தன்னையறியாமலே நெஞ்சு நிமிர்ந்து ஒரு கம்பீரம் தெரியும்,உடலிலும்,முகத்திலும்.கால ஓட்டத்தில் சுதந்திரகாலப் போராட்டங்களை படிக்கையிலும்,ஒரு இருமாப்பும் உண்டானது, சுதந்திரப் போராட்டத் தியாகளிகளான பகதூர் ஷா,நேதாஜி ,காந்தி போன்றவர்களின் வரலாற்றைப் படித்து அதனுள் பயணிக்கையில் .இப்படியாக இந்தியா என்றாலோ,இந்தியன் என்றாலோ ,ஒரு "கெத்து"மனதினுள் ஊடுவும்.மூன்றுப் பக்கமும் கடலாலும்,தலையில் பனிமலையுடனும் காட்சி தரும் அழகான தேசம்.பல நிற,இன,மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட அற்புதமானது தேசம்தான் இந்தியா.

      
        இப்படியாக எத்தனையோ ,பெருமைகள் கொண்ட இந்தியாவிலோ,மாட்டிறைச்சி தின்பது கூட மரணத்தண்டனைக்குரிய செயலானதாக பார்க்கப்படுகிறது ,பேசப்படுகிறது ,சில கயவர்களால்.மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவே முதலிடம் என பெருமையாக பேசிக்கொண்டு,இன்னொருப் பக்கம் உள்நாட்டு மக்கள் உண்பது மாபாதகமாக காண்பிக்கப்படுகிறது.இப்பாசிசவாதிகள் ஏதோ இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் ஆபத்தானவர்கள் என சிலர் மனப்பால் குடித்தார்கள்.ஆனால் இன்று பல்வேறான சம்பவங்கள் ,இந்த பாசிசவாதிகள் இந்திய இறையாண்மைக்கே எதிரானவர்கள் என சாமானிய இந்திய மக்களும் உணரத் தொடங்கி விட்டார்கள்.விவசாயிகளுக்கு எதிரான நில அபகரிப்பு சட்டம், கருப்பு பண விவகாரம்,கோயிலுக்குள் நுழைந்த தலித்
முதியவர் கொலை,புகார் அளிக்கச் சென்ற தலித் குடும்பத்தினர் நிர்வாணப்படுத்தப்பட்ண அவலம்,இப்படியாக நடக்கும் சம்பவங்கள் இந்தியா ,கற்காலத்திற்கு சென்று விட்டதோ என அச்சப்பட வைக்கிறது.

        இத்தனை வகையான அநீதிகள் நடக்கிறதே,நம்மால் என்ன செய்திட முடியும் என கலங்கி நிற்கத் தேவையில்லை,நம்மால் முடியுமா !?என மலைத்து நிற்கவும் தேவையில்லை.நம் இந்திய தேசத்தில் ஜனநாயக முறையில் போராடுவதற்கு ,வழிவகைகள் உள்ளது,அப்போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகள் முன்னெடுத்துச் செல்கின்றது.நாம் செய்ய வேண்டிய கடமையானது ,ஜனநாயக வழியில் போராடும் அவர்களோடு கைக்கோர்ப்தேயாகும்.ஆம் !நாம் நம் பாரதத்தை காத்திட வேண்டும்.அனைத்து சமுதாய மக்களும் சம உரிமையாக வாழ்ந்திட நாம் அரசியல் அதிகாரத்தை அடைந்திட வேண்டும்."ஓடாத மானும் !போராடாத மக்களும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை"என ஓர் கவிஞன் சொன்னான்.ஆதலால் எதற்காகவும் கலங்கிட ,தயங்கிட தேவையில்லை,போராட்டக்குணம் நம்மிடையே இருக்குமேயென்றால் ........!!

        

1 comment:

  1. எல்லாம் அரசியல் விளம்பரம் மட்டுமே சகோ வியாபார உலகு எல்லாத்தையும் வெல்லும்!

    ReplyDelete