Friday 29 April 2016

மறக்கத்தான் நினைக்கிறேன்...!!


நனைத்த கோடை மழையையும்
தங்கவிட்டு தள்ளிவிட்ட பூவிதழையும்
குளிர்ந்த வேப்பமர நிழலையும்
மூழ்கச்செய்த கவி வரிகளையும்
விழுங்கிய புன்னகையையும்
வருடிய மயிலிறகையும்
வாட்டியெடுத்த வாடையையும்
இறுக்கியணைத்த இளங்காற்றையும்
இத்துடன் சேர்த்து என்னையும் !

"மறக்கத்தான் நினைக்கிறேன்"!

   

2 comments: