Thursday 12 May 2016

மௌனக் கதறல்..!!


காக்கையின் கரைதலில் கண்ணீர் கலந்திருக்கிறது
பறந்து கடந்துச் செல்லும் கொக்குகளும் முணங்களுடன் செல்கிறது
வாலைத் தட்டி ஓடித்திரியும் அணிலின் கண்களில் ஏக்கம் நிறைந்திருக்கிறது
தென்னைமர மைனாக்கூட்டில் ஒப்பாரி கேட்கிறது
வீதியில் செல்லும் வெள்ளாடுக்கூட்டத்தில் வெறுமை விளையாடுகிறது
கவிதை தரும் என் சிந்தனைக்கூடமும் சிதிலமடைந்து விட்டது!

ஆம்!
புதுப்பள்ளிக்காக
உயிருடன் உணர்வுடன் உறைந்திருந்த பள்ளிவாசல் உடைபடுவதால்........!!!!

No comments:

Post a Comment