Thursday 1 September 2016

ஈரம்..!! (சிறு கதை) (4)


        அப்பொழுது சிறுபிள்ளைகள் அத்தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.அக்குழந்தைகளில்,இப்ராகீமின் அக்கா பிள்ளைகளும் அடக்கம்.குழந்தைகள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் ,மிக வேகமாக சென்ற ஆசிப்பை பார்த்து,இப்றாகீமின் அம்மா திட்ட ஆரம்பித்தாள்...

     "மண்ணுல இருப்பானுவ ...இப்படி ஆடுறானுவ...சின்ன புள்ள இருக்குனு பாக்காம இப்படி போறான்...ஏதாவது புள்ளைய மேல பட்டுடா வரவா ..போகுது..!?என திட்டிக்கொண்டே ,தன் பேரனை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்,உள்ளே இருந்த இப்ராகீம்,காரணம் கேட்க,அவன் அம்மா விவரம் சொல்ல,கடுப்பானவன்,காலையில் அவன்கிட்ட "என்னனு கேட்டு முடிச்சா தான்" சரி வரும் என்று எண்ணியவனாக இருந்தான்.

     விடிந்ததும் ஆசிபைத் தேடினான்,அவன் கண்ணில் படவே இல்லை.விசாரித்ததில் ஆசிப் அம்மாவைக் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரி போயிருப்பதாக கேள்விப்பட்டான்.

     மலை நேரமானது ,ஆர்.கே.எஸ்.என்றழைக்கப் படும் ஆர்.கே.சம்சுகனி மாமா ,டீக்கடையில் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார்.சம்சுக்கனி மாமா,பண்பாளர்,கவிஞரும் ஆவார்.கம்யூனிசக் கட்சியைச் சார்ந்தவர்,தன்மையான மனிதர்.அவருக்கு துணையாக அவரது மகன் நபி இஸ்மத் உதவி செய்துக் கொண்டிருந்தார்.சிலர் கடைக்குள் டீ குடித்தார்கள்,அதிலொருவன் இப்ராகீம்.கடைக்கு பின்னால்தான்,ஆசிப் தன் கூட்டாளியுடன் பேசிக் கொண்டிருந்தது,உள்ளே இருந்த இவனுக்கு நன்றாகவே கேட்டது.

 (தொடரும்...)

    

2 comments: