Wednesday 19 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (2)


    படிப்பு எட்டாம் வகுப்போடு நின்று விட்டது.அதன் பிறகு முழு நேரமும் ,பனைமரக்காடு,கடற்கரை,என நாயாய்,பேயாய் அலைவதுதான்.கூடா நட்பு கேடாய் அமைந்தது.சிகரட்டின் புகையில் இருந்த ஆர்வம்,அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திற்று.அது ஊருக்குள் போதையுடன் அலைபவர்கள்,ஏதோ சாதித்தவர்கள்போல் பார்க்க வைத்தது.மதுப்பாட்டில்களை தொட்டுப் பார்த்திட ஆவல் தோன்றியது.அந்த காலகட்டத்தில்தான் ,கூடவே சுத்திக் கொண்டிருந்த சலாம் ,"ஊத்தி" தந்தான்.
முதலில் தயங்கிய என்னை..

"இல்லடா காசிம்....குடி..பயப்படாத .."என ஆறுதல் படுத்தி,ஆர்வப்படுத்தினான்.கொஞ்சங்கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தேன்.குடிப்போதை என்னை சில நாழிகைகள் ,ஒரு வித மிதப்பில் என்னை ஆழ்த்தியது .அந்த சுகம் ,மீண்டும்,மீண்டும் போதையைத் தேட வைத்தது.என் தேடல் வீணாகவில்லை.பயணப்பார்ட்டி,கல்யாணப்பார்ட்டி"என்று தொடர்ச்சியாக "பார்ட்டி"வந்துக் கொண்டே இருந்தது.நாட்டில் பசிக்கு உணவளிப்பவர்களை விட,"பார்ட்டி"என்ற பெயரைச் சொல்லி வாங்கி "ஊற்று"பவர்களே அதிகம்.குடியாய் குடித்தேன்,குடியும்
என்னை குடித்தது.

     ஊருக்குள் "குடிகாரப் பய" பட்டம் இலகுவாக கிடைத்தது.போட்டுக் கொண்டப் போதையை ,அப்ப அப்ப ஊருக்கு உணர்த்த,சில சலம்பல்கள் செய்ய வேண்டி வந்தது.போதையோட போய் படுத்து விட்டால்,குடிகாரன்களுக்கு என்ன மரியாதை இருக்கு..!?"என ,எனக்கு முன்னாள் இருந்த குடிமகன்களால்,பாடம் நடத்தப்பட்டிருந்தேன்.ஆதலால் சின்ன,சின்ன பிரச்சனைகளை செய்து வந்தேன்.ஜமாத் பெரியவர்கள்,பலமுறை எச்சரித்தும்,அபராதங்கள் விதித்தார்கள்.எதற்கும் நான் அடங்குவதாக இல்லை .

     ஒருநாள் பக்கத்து ஊரான "செட்டிய மாரியூரில்"கோவில் திருவிழா நடந்தது.அவ்விழாவின் ஒரு பகுதியாக "மதுரை நடனக்குழுவினரின்"ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைப்பெற இருந்தது.அப்பொழுது....

(தொடரும்...)

    

No comments:

Post a Comment