Monday 24 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (6)


     இன்ஸ்பெக்டர் தன் இருக்கையில் அமர்ந்தவுடன்,காண்ஸ்டபிள் என் விவகாரத்தை சொன்னார்.இன்ஸ்பெக்டர் என்னைப் முறைத்துப் பார்த்து விட்டு,சக்தி வகையறாக்களை ,தன் கை சைகைகளால் அழைத்தார்.அவர்களுடன் சேர்ந்தே ஷாஜஹானும் வந்தார்.இன்ஸ்பெக்டர் சக்தியை பார்த்துக் கேட்டார்.

    "என்ன...நடந்ததுனு சொல்லு..எப் ஐ ஆர் போடனும்னு ..."சொன்னார்,அதற்கு சக்தி வாயைத் திறக்கும் முன் ஷாஜஹான்,சமாதானமாக போவதாக சொன்னார்.அதற்கு இன்ஸ்பெக்டர்,"நீ யார்யா..."னு கேட்டார்.அதற்கு ஷாஜஹான் ...

"நான் ஷாஜஹான் ,வக்கீலாக இருக்கேன்..பரமக்குடியில.."என சொன்னதும்,வக்கீல் என்று தெரிந்த பிறகு,இன்ஸ்பெக்டர் கொஞ்சம் மரியாதையாக பேச ஆரம்பித்தார்.அதன் பிறகு ,சிறிது தயக்கத்திற்கு பிறகு,"சரி...சமாதானமா போறோம்னு..எழுதி கொடுத்துட்டுப் போங்க.."னு சொன்னார்.

   காண்ஸ்டபிள் எழுதி தர,நானும்,சக்தியும் கையெழுத்துப் போட்டு விட்டு கிளம்பினோம்.ஷாஜஹான் எந்த "பிரதிபலனை"யும் என்னிடம் எதிர்பாராமல் ,"சரிப்பா...இனி ஒழுங்கா இரு.."என சொல்லி விட்டு பரமக்குடி பஸ்ஸில் ஏறி சென்று விட்டார்.நானும்,மைதீனும் எங்கள் ஊருக்கு செல்ல,ஷேர் ஆட்டோவில் ஏறினோம்.நான் மைதீனிடம் பேச வெட்கமாக இருந்தது. யாருமே எனக்கு உதவ வராத நிலையில்,அவன் வந்தது,நன்றி கலந்த மரியாதையால்,என் கண்கள் கலங்கிற்று.

(தொடரும்...)

   

No comments:

Post a Comment