Tuesday 18 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (1)


      "தண்ணியில்லாத காட்டுக்கு ஒன்ன மாத்திருவேன்"னு என ,தனக்கு கட்டுப்படாத போலீஸ்காரர்களை ,அடாவடி அரசியல்வாதிகளாக வரும் வில்லன்கள் பேசும் வசனமாக சில பல திரைப்படங்களில் வைத்திருப்பார்கள்.அப்பொழுதெல்லாம் அப்படியொரு ஊரு வேறு எங்கோ இருக்கும் என எண்ணியதுண்டு.ஆனால் அது நான் பிறந்து வாழ்ந்த இராமநாதபுரம் மாவட்டம்தான் என்பதினை பிற்காலத்தில்தான் அறிந்தேன்.ஆம்,வறண்ட பூமியின் சொந்தக்காரன்தான் நான்,கடற்கரைக்காற்றின் காதலன்தான் நான் ,தார்ச்சாலை வெயிலின் வெப்பம் தாளாமல்,சாலையின் மேல் படர்ந்திருக்கும் கானல் நீரில் கவிதையைத் தேடியவன்தான் நான்,எனக்கு சிறுவயதில் சில பள்ளிக்கூட நண்பர்கள் இருந்தார்கள்,அதிலொருவன் அன்வர்,அவன் கையில் எப்போதும் பணம் புரளும் ,அப்பணத்தை வைத்துதான்,எங்களது நட்பு வட்டாரத்திற்கு,குச்சி ஐஸ்,மிட்டாய்,முறுக்கு எல்லாம் வாங்கித் தருவான்.அதோட சிகரட் பாக்கெட்டும் வாங்கி வருவான்.

         பத்து வயதிலேயே சிகரட் அடிக்க பழகி விட்டோம்,யாருக்கும் தெரியாமல் ,கண்மாயை மறைத்து வளர்ந்திருக்கும் ,கருவமரங்கள்தான் நாங்கள் மறைந்திருந்த சத்தியமங்கலக்காடு.ஒரு சிகரட் அடித்து விட்டு,ரோஜா பாக்கு ,மூன்று ,நான்கு என தின்று விட்டு,மாற்றி மாற்றி ஊதி பார்த்துக் கொள்வோம்,சிகரட் வாடை வருகிறதா என்று.இப்படி ஆரம்பித்த  எங்களது கெட்ட பழக்கம்,எப்படியெல்லாம் எங்களை அழைத்துச் சென்றது என்பதை ,கொஞ்சம் சொல்கிறேன் ...


   (தொடரும்....)

No comments:

Post a Comment