நிர்வாக அறையின் வாசலில் நின்றுக் கொண்டு ,உள்ளே இருந்த நிர்வாகிகளைப் பார்த்தேன்.என்னைக் கவனித்த காஜா மச்சான் சொன்னார்.
"டேய்.... ஒன்னத் தேடி போலீஸ் வந்துச்சி.."என அவர் சொல்லி முடிப்பதற்குள்..
"போலீஸ் வந்தா எனக்கென்ன...!?என நான் திமிறாக பதிலளித்து,காஜா மச்சானை ஏளனமாக நான் பார்த்தது,அவருக்கு கோபமூட்டியது.
"ஏண்டா..."......."நீங்க போதய போட்டுட்டு சண்ட மயிரு போடுவீங்க...இதுக்கு நாங்க பஞ்சாயத்துக்கு அலையனுமோ...!?என எகிறினார்.
"ஒங்கள யாருங்க...பஞ்சாயம் பண்ண கூப்பிட்டா...!?பொத்துங்க .."என நான் சொன்னதும்..
"என்னடா மயிரு சொல்ல சொல்ல எதுத்து எதுத்துப் பேசுறா..."னு ,செருப்பையெடுத்து அடிக்க ஆரம்பித்து,சராமரியாக குத்தும் விட்டார்.நிலைக்குலைந்துப் போனேன்.அங்கிருந்த சிலர் விலக்கி விட்டார்கள்.அதே வேளையில் ,வேறொரு கேஸ் விசயமாக ,எதார்த்தமாக வந்த காண்டபிள்கள் என்னை பிடித்து,அவர்கள் வந்த பைக்கில் நடுவில் உட்கார வைத்து அழைத்துச் சென்றார்கள்.பைக் சாயல்குடியை நோக்கி சென்றது...
(தொடரும்....)
No comments:
Post a Comment