Sunday 23 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (5)


     பைக்,சாயல்குடி காவல்நிலையம் வந்தடைந்தது.அங்கு நான் இறங்கியதும்,காண்ஸ்டபிள் என் முதுகில் பலமாக அடித்து சட்டையைக் கழற்றி,தரையில் உட்காரச் சொன்னார்.நானும் சட்டையை கழற்றி விட்டு ,பக்கத்தில் வைத்துக்கொண்டு ,முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன் .உறவினர் யாராவது எனக்காக வந்து,போலீசாரிடம் பேசி கூட்டி போவார்கள் என எதிர்ப்பார்த்தேன்.ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது .திரைப்படங்களில் போலீசார் அடிக்கும் காட்சிகள் என் நினைவுக்கு வந்து ,போதாக்குறைக்கு என்னுள் அச்சத்தை உற்பத்தி செய்தது.

        நேரம் கடந்துக் கொண்டிருந்தது,என் கவலை இருளுக்கு வெளிச்சமாக,மைதீனும்,வழக்கறிஞர் ஷாஜஹானும் வந்தார்கள்.அவ்விருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள்.என்னைப் பார்வையால்,நலம் விசாரித்து விட்டு ,கான்ஸ்டபிளிடம் என் வழக்கு விசயமாக கேட்டார்கள்.

   "இன்னும் எஃப் ஐ ஆர் போடல..அடிபட்ட சக்திய வர சொல்லி இருக்கு ..அஞ்சு மணிப்போல,இன்ஸ்பெக்டரும் வருவாரு..அவர் வந்த பிறகு பேசிக்கங்க..."என்று கான்ஸ்டபிள் சொல்லி முடித்தார்.

     சிறிது நேரத்திற்குள்,ஐந்து மணிக்கு மேல்,சக்தி தலையில் கட்டுடன்,அவனது உறவினருடன் வந்திருந்தான்.இவர்கள் தான் என்மேல் புகார் அளித்தவர்கள் என மைதீன் சொன்னதும்,ஷாஜஹான் அவர்களிடம் பேசினார்,எனது நிலைமையையும்,வறுமையையும் சொல்லி,வழக்கு பதியாமல் இருக்கச் சொல்லியும்,மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லி சமரசமாக போகச் சொன்னார்.சக்தி தரப்பு முடியாது என முறுக்கினார்கள்.ஷாஜஹான் தொடர்ப்பேச்சால் கொஞ்சம் மனம் இளகி,சரி...இன்ஸ்பெக்டர் வந்ததும் சொல்லி விட்டு சென்றிடுவோம் என்று ஒத்துக்கொண்டார்கள்.

      அந்த வேளையில் தன் பல்சரில் வந்த இறங்கினார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.

(தொடரும்.....)

   
    

No comments:

Post a Comment