Thursday 20 October 2016

பனைக்காடு..!(சிறு கதை) (3)



     ஆடல் பாடல் நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் நடைப்பெறும் என ,அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.அதற்குள் இறங்கியப் போதையை,ஏற்றிக் கொள்ள ,பனை மரக்காட்டிற்குள் பதுங்கினோம்.நான்,உமர்,மற்றும்,முந்தல் சக்தி எல்லோருமாக,கேலியும்,கிண்டலுமாக பேசிக்கொண்டு இருந்தப் போது,வயிற்றை நிரப்பிய போதைத்திரவகம்,மண்டைக்குள் மணியடிக்க ஆரம்பித்தது.சாதாரணமாக பேசப்பட்ட வார்த்தைகளும்,விஷமாக மாற ஆரம்பித்தது.

    "ஏண்டா...காசிம்....இப்படி ஓசியில ,குடிக்கிறீயே...எங்காவது வேலைக்கு போவலாம்ல..."என்றான் சக்தி என்னைப் பார்த்து.

  "ஆமா.."......"இவரு கலெக்டர் வேலை பாக்குறாரு... "........."வட்டிக்குத் தானே வுட்டு பொழைக்கிறே.....!?"என கெட்ட வார்த்தைகளை சேர்த்து பேசினேன்.

   சக்தியும் தடித்த வார்த்தைகளைப் பேச,வார்த்தை முற்றி ,அடியில் ஆரம்பித்து,மண்டை ஒடைந்தது சக்திக்கு.பந்தோபஸ்துக்கு வந்த போலீசார் கையில் சிக்காமல் இருந்திட,ஆளுக்கொரு பக்கமாக ஓடி விட்டோம்.ரத்தக்காயத்துடன் இருந்த சக்தி சாயல்குடி போலிசிடம் புகார் செய்து விட்டான்.போலீசார் எனது ஊருக்கு வந்து,ஜமாத் பெரியவர்களிடம் ,என்னை சாயங்காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என சொல்லி விட்டு போயிருந்தார்கள்.


    மறுநாள்  காலையிலேயே கொஞ்சம் போதையில் இருந்த என்னை ,ஜாமாத் பெரியவர்களில் ஒருவரான காஜா மச்சான் கூப்பிடுவதாக ,அஜ்மீர் வந்து சொன்னான்.என்னவென்று கேட்டு விட்டு வருவோம் என நானும் சென்றேன்.நான் போன வேளையில்,நிர்வாக கூட்டம் நடந்துக் கொண்டிருந்து.

(தொடரும்....)

   

No comments:

Post a Comment