Tuesday 15 November 2016

சின்ன சின்னதாய் ..!(2)

"மண்ணில் விதைப்பது தான் முளைப்பதுப் போல்,நாம் பேசிடும் வார்த்தைகள்கள்,பிறரது மனதில் புதைந்து,நம்மைப் பற்றிய எண்ணங்களாக வளர்கிறது."

 ---------------------

"சொல்லெனும் கல்லால்,ஒருவரது மனக்கண்ணாடியை உடைப்போமென்றால்,அதில் சிதறுதுவது ,அம்மனக் கண்ணாடியில் பதிந்திருந்த ,உங்களது பிம்பமும் தான்."

  -----------------------

"தோற்க தோற்க துவளாமல் முயன்றுக் கொண்டே இரு.ஆம்! வலிக்க வலிக்கத் தான்,உடற்பயிற்சியில் உடம்பில் உரமேறுகிறது."

------------------------

"குழந்தைகளின் நெஞ்சில் பெருமைத் தனத்தை ஊட்டி வளர்க்காதீர்கள் .அது அவர்களது சோற்றில் நஞ்சைக் கலப்பதற்கு சமம்."

------------------------

"உன்னை முழுமைப்படுத்த முயற்சித்துக் கொண்டே இரு.முழுமையடைந்த சிசுவை கருவறை வெளியேற்றுவதுப் போல்,காலமும் ஒரு நாள் உன்னை,இவ்வுலகிற்கு அறிமுகம்படுத்தும்."

---------------------------

No comments:

Post a Comment