Friday, 7 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (22)

சேதுபத்திரர்-
 கேள்வியால்!

ஒருவரையொருவர்-
பார்த்தார்கள்-
ஒற்றர்கள்!

''பிரபுவே!
நாங்கள் சொல்லபோவது-
ராஜ குருவால் சொல்லபட்டவைகள்!

அரபிக்கள்-
நீச சாதியினர்கள்!

மந்திரவாதிகள்!

பேதை பித்தர்கள்!

போதை வெறியர்கள்!

நம் மண்ணில் கொல்லபட வேண்டியவர்கள்!''

இது-
ஒரு ஒற்றர்

தொடர்ந்தார்-
மற்றொருவர்!

''அவர்கள்-
இக்குற்றங்கள் செய்பவர்களாக இல்லை!

ஆதலால்-
''மாட்டி விட''வழியேதும் இல்லை!

ஆனால்-
கோவில் பக்கமாக சுற்றுகிறார்கள்''!

இவைகளை-
மற்றவர்களும்-
தலையாட்டி-
ஆமோதித்தார்கள்!

''நான்-
கவனிக்கறேன்!

இனி-
அரசருக்கு எதிராக நடப்பவற்றை-
கண்காணிக்க உத்தரவிடுகிறேன்!''

கட்டளையிட்டு-
கூட்டத்தை முடித்தார்-
சேதுபத்திரர்!

''தூரோகிகளை மறைந்து நின்று-
காட்டி கொடுத்த-
வேணுவும், சீடரும்!

விலங்கிட்டு-
சிறைக்கு அழைத்து செல்லபட்டார்கள்-
திரும்பவும்!

தளபதிக்கும்-
சேதுபத்திருக்கும்-
மன்னர் அழைப்பு வந்தது-
காவலர் வாயிலாக!

விரைந்தார்கள்-
இருவரும்-
காற்றோடு காற்றாக!

அரசர் -
அரண்மனையில்-
களைத்துபோய் இருந்தார்!

மாறு வேட ஒப்பனையை கூட-
கலைக்காமல் இருந்தார்!

இருவரும்-
வந்தார்கள்!

மன்னருக்கு-
மரியாதை செய்தார்கள்!

மன்னர் கண்ணசைக்க-
இருவரும் அமர்ந்தார்கள்!

''ராஜ பீட விவகாரம்..!?''
மன்னர்-
கேட்டார்!

''அரசே!
வைர வைடூரியங்களை-
அள்ளி சென்றுள்ளார்கள்-
நான் செல்வதற்குள்!''

சிந்தி கிடந்த -
வைரங்களை வைத்திருந்தார் -
தன் கையினுள்!

காட்டினார்-
சேதுபத்திரர்!

மன்னர் திரும்பி -
''நீர் ஓடிய சமாச்சாரம்..!?-
தளபதியாரிடம் கேட்டார்!

''அரசே!
நான் ஓடியது-
ராஜ குரு -
தப்பித்திருக்கலாம்-என்ற
எண்ணத்தில்!


ஆனால்-
அவர் இருப்பதற்கான -
சப்தங்கள் கேட்டது-
அறையினுள்!

காவலை அதிகரித்துள்ளேன்!

உங்கள் அழைப்பினால்-
இங்கு வந்துள்ளேன்!''

தளபதியார்-
சொன்னார்!

மன்னர்-
கேட்டார்!

தாமதிக்காமல்-
ஆணையிட்டார்!

''படைகளை தயார் படுத்துங்கள்!

சிங்கராயரை தலைமையாக்குங்கள்!

மார்த்தாண்ட வர்மனின் படைகளை சிதறிடியுங்கள்!

கூடுமானவரை  மார்த்தாண்ட வர்மனை உயிருடன் பிடியுங்கள்!

வேணு, காளியை  இடம் காட்டிகளாக பயன்படுத்துங்கள்!

வேணு,காளி துரோகம் இழைத்தால் கழுவிலேற்றம் என்பதை தெரியபடுத்துங்கள்!

போகும் வழியில் அரபிக்கள் குழு படையுடன் கலந்து கொள்வார்கள்!''

மன்னர் -
அணைகளை பிறப்பித்தார்!

அமைச்சர்கள்-
நிறைவேற்றினர்!

அங்கு-
படை புறப்பட்டது!

இங்கு-
மன்னருடன் ஆலோசனை நடந்தது!

சேதுபத்திரர்-
தொடர்ந்தார்!

''மன்னா!
நாம்  நாட்டிலுள்ள-
புல்லுருவிகளை பிடுங்குகிறோம்!

ஆனால்-
அரபிக்கள் விவகாரத்தால்-
கலக்கம் அடைந்துள்ளோம்!

இரவில் பயிற்சி நடக்கிறது!

மீனவ சமூகம் கலந்து கொள்கிறது!

சொல்லி கொடுக்கபடுகிறது-
வாட்களால் தாக்க!

ஆயுதம் தரித்தவர்களை-
எதிர்க்க!

நரம்புகளை தரிக்க!''

எனக்கென்னமோ-
விபரீதம் என உணர்கிறேன்!

அப்பயிற்சியில்-
தங்களது மெய்க்காப்பாளரும் கலந்துள்ளார்கள்-
ஆதலால-
அச்சமடைந்துள்ளேன்!''

கொட்டி தீர்த்தார்-
சேதுபத்திரர்!

மன்னரின்-
பதிலுக்காக காத்திருந்தார்!

(தொடரும்....)

Thursday, 6 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (21)

தளபதியார்!
 மடாலயத்திற்கு-
ஓட்டம் கொண்டார்!

மன்னர்-
பதற்றமின்றி தொடர்ந்தார்!

சேதுபத்திரர்-
மடாலயத்தின் வரைபடம்-
வரைந்தார்!

முக்கிய இடங்களை-
சீடர் காட்டினார்!

மன்னர்-
கேள்விகளான ரகசிய குறியீட்டிற்கு-
விடைகளை அறிந்தார்!

ஒன்றிரண்டு-
விடை தர மறுத்தது!

சீடர்களின் பாதுகாப்பை -
அரசரின் உத்தரவு-
உறுதிபடுத்தியது!

மன்னர்-
சேதுபத்திரருக்கு-
உத்திரவு பிறப்பித்தார்!

''ராஜ பீடத்தை கண்காணிக்க வேண்டும்!

தேவையென்றால் உடைக்கவும்!

படைகளை தயார்படுத்தவும்!

ஒற்றர்படை கூட்டம் நடத்தவும்!

என் கட்டளைக்கு காத்திருக்க கூடாது!

'காரியம' நடத்த தாமதம் கூடாது!''

சொல்லி சென்றார்-
மன்னர்!

வியப்படைந்து போனார்-
சேதுபத்திரர்!

ஒற்றர் படை கூட்டம்-
கூட்டபட்டது!

ஒற்றர்களுக்கிடையே-
சலசலப்பு ஏற்பட்டது!

காரணமும் இருந்ததது!

''ஒற்றர் படை நிரவாகி-
ராஜ குருவை காணவில்லை!

ஒற்றர் படை தலைவர்-
நம்பீஸ்வரர் படுகொலை!

அடுத்த தலைவர் வேணு -
என்ன ஆனார்!? -
தெரியவில்லை!''

காத்திருந்தார்-
சேதுபத்திரர்-
சலசலப்பு  ஓயும்வரை!

பேச ஆரம்பித்தால்-
மீண்டும் -
எதிர்ப்பு அலை!

காவலர் ஒருவர்-
சேதுபத்திரர் காதில் கிசுகிசுத்தார்!

சேதுபத்திரர்-
தலையசைத்தார்!

எழ சொன்னார்-
''எதிர்ப்பை ஓங்கி ''ஒலித்தவரை!

விசாரித்தார்!

'' நீர்தான்-
தென்மண்டல பொருப்பாளரா!?

உம் மண்டலத்தில்-
மார்த்தாண்ட வர்மா நலமாக உள்ளாரா!?

ஆட்சியை கவிழ்க்க  படைகள் தயாராகி விட்டதா!.?

மன்னர் ''மாயமாகாததால்'' ஆட்சி மாற்றம் தாமதமானதா!?

கோவில் நடந்த ரகசிய கூட்டம்!

அதனை செயலாற்ற எப்போது திட்டம்!?''

கேள்விகள் துளைத்தது!

விஸ்வநாதன் என்ற-
அவ்வொற்றரின் நிலை தடுமாரியது!

''தானாக வந்து விடவும்''-
சேதுபத்திரர் எச்சரித்தார்-
ராஜ குரு விசுவாசிகளை!

சிலர் எழுந்தார்கள்-
சிலர் மறைந்தார்கள்!-
சேதுபத்திரர் அறிந்திருந்தார்-
அத்துரோகிகளை!

அனைவரும்-
இழுத்து செல்லபட்டார்கள்!

''களைகள்'' பிடுங்கபட்டதும்-
கூடினார்கள்-
மற்றவர்கள்!

புதிய தலைவராக-
சிங்கராயர்  நியமனம்!

அமைதி கொண்டது-
அவ்விடம்!

''அரபிகளை பற்றி நீங்கள் அறிந்தது..!?-
சேதுபத்திரர் கேட்டார்!

அரபிகள் விவகாரத்தை-
தோண்ட ஆரம்பித்தார்!

(தொடரும்....!!)






Wednesday, 5 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (20) {1100 வது பதிவு}

ஓலைச்சுவடி-
ஒளித்து வைத்திருந்தது!

சமஸ்கிருத மொழியையும்!
ரகசிய குறியீடுகளையும்!

தெரியவில்லை-
சேதுபத்திரருக்கு!

சென்றது-
மன்னரின் கைகளுக்கு!

''இண்ணும் நடத்த வேண்டிய-
கொலைகள்!

துரிதமாக முடிக்கவேண்டிய-
வேலைகள்!

அதனூடே-
ராஜபீடம்!
தாமரை பூ!
சொர்க்க வாசல்!

இப்படியாக இருந்தது!
ஓலைச்சுவடியில்!

சில தகவல்கள்-
அகபடாதிருந்தது-
மன்னர் சிந்தனைக்குள்!

பார்க்கிறார் அரசர்!
மறுபடியும்!

மேலும் உண்டானது-
குழப்பம்!

அரசர் இரவில்-
தூங்கியதாக தெரியவில்லை!

''அசந்த'' மெய்க்காவலர்கள்-
விழுத்திடும்போது-
மன்னர் படுக்கையில் இல்லை!

பதறிய காவலர்கள்-
தேடினார்கள்-
அரண்மனையெங்கும்!

தோட்டத்தில்-
சப்தம்!

அரபிகளோடு-
மன்னர்-
ஆலோசனை கூட்டம்!

காவலர்களுக்கு-
மன்னர் உத்தரவு-
''சென்று தயாராகவும்!''

நேரம் கழிகிறது!

முக்கிய அமைச்சர்களுடன்-
விசாரணை நடக்க இருக்கிறது!

வேணு அழைத்து வரப்பட்டார்!

அதட்டினால் -
அழும் குழந்தையை போல-
உண்மைகளை கொட்டினார்!

பிரபுவே!
கருணை காட்டுங்கள்!

இனி-
சொல்வதெல்லாம் உண்மைகள்!

''அரசே!
நான் -
இதற்கு முன் ஆண்ட-
மார்த்தாண்ட வர்மனின் உதவியாளன்!

பின்னாளில்-
ராஜ குருவால் ஒற்றர்படைக்கு சேர்க்கபட்டேன்!

ராஜ குருவிற்கும்-
மார்த்தாண்ட வர்மருக்கும்-
செய்திகளை பரிமாரியுள்ளேன்!

மன்னர்-
''சமீபத்தில் சொன்ன செய்தி!?

வேணு-
''மன்னர் ''மாயமாவார்''-
சீக்கிரத்தில்-
ஆட்சியில் அமர்வாய்-எனும் செய்தி!

மன்னர்-
''மார்த்தாண்டரிடம் -
ஏதேனும் படை உள்ளது!?''

வேணு-
''சிறு படை உள்ளது.!''

மன்னர்-
''எப்போது-
என்னை ''முடிக்க ''திட்டம்!'?

வேணு-
''உங்கள் பிறந்த நாளன்று..!''

அத்தனையும்-
தவடு பொடியானது-
அரபிகள் வரவால் -
அன்று!

அரபிக்களை வெளியேற்ற-
சூழ்ச்சி செய்தோம்!

கிரீட விவகாரத்தால்-
தூக்கு கயிற்றை -
எதிர்நோக்குகிறோம்!

வேணு-
கலக்கத்துடனும்-
கண்ணீருடனும்-
சொல்லி முடித்தார்!

சிறை சலுகைகளுக்கு-
அனுமதித்தார்-
மன்னர்!

பிறகு-
சீடர்கள் வந்தார்கள்!

விசாரணையை-
எதிர் நோக்கினார்கள்!

ஓலைச்சுவடு கொடுத்து-
விளக்கம் என்ன!?-
கேட்கபட்டது!

''அரசே!
எங்களையும் கொல்ல -
சொல்லியுள்ளது!

மடாலயத்தில்-
ரகசிய வழிகளுள்ளது!''

சீடர்கள் சொன்னார்கள்!

தளபதியார்-
''எங்கெல்லாம் -
ரகசிய வழிகள் உள்ளது!''!?

பதிலை எதிர்பார்த்து-
கேட்டதும்-
தளபதியார் அரண்டு போனார்!

பதிலாக வந்தது-
ராஜ குரு -
இப்போது இருக்கும் அறையும்..!!''-
என்று!

(தொடரும்...!!)






Tuesday, 4 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (19)

குருவிடம்-
மக்கள் பெற்றார்கள்-
ஆசீர்வாதத்தை!

மக்களோ அறியவில்லை-
குரு தலைக்கு மேல்-
கத்தி தொங்குவதை!

விஷ்ணு பட்டர்-
ஆசிர்வாதம் பெற்றார்!

குரு -
விழுங்கவும் முடியாமலும்-
துப்பவும் முடியாமலும்-
தவித்தார்!

பூஜை பொருட்கள் நிரப்பபட்டது!

மந்திரங்கள் ஓதபட்டது!

உணவு கொடுக்க!

உண்டதை எடுக்க!

வழிகள் அமைக்க!

இரு காவலர்கள் நிற்க!

குரு உள்ளிருக்க!

கதவு பூட்டபட்டது!
சாவி கைப்பற்றபட்டது!

மற்றொரு அறை!

விஷ்ணு மற்றும்-
சீடர்களிடம் விசாரணை!

சீடன் ஓலைச்சுவடியை -
கையில் கொடுத்தான்!

மன்னிப்பு வேண்டி காலில் விழுந்தான்!

விஷ்ணுவை-
சேதுபத்திரர்-
கேள்விகளால் துளைத்தார்!

விஷ்ணு அவகாசம் கேட்டார்!

எத்தனை நாட்களும்-
அவகாசம் எடுக்கலாம் பாதாள சிறையில்..!!-
சேதுபத்திர் சொன்னார்!

இழுத்து வர-
காவலர்களுக்கு உத்தரவிட்டார்!

அரசவை கூடியது!

மற்ற அமைச்சர்களுக்கு-
ராஜ குரு ''சாதனைகள்''-
விளக்கபட்டது!

ராஜ குருவிற்கு-
பரிந்துரைக்க யாருமில்லை!

பரிதாபம் படகூடியவர்களும்-
யாருமில்லை!

''நானொன்றும் பதவி ஆசை கொண்டவனில்லை!

நாட்டிற்கு  நன்மை பயக்கவே ஆட்சியில் தொடர வேண்டிய நிலை!

நாங்கள் காட்சி பொருளாக காட்டபடுகிறோம் அரசர்கள்!

அதிகாரம் செலுத்துபவர்களாக இருக்கிறார் மடாதிபதிகள்!

எதிர்த்தாலோ, மறுத்தாலோ காணாபிணமாக்கபடுகிறார்கள்!

பரப்பபடுகிறது ''முக்தி''யடைந்ததாக புரட்டுகள்!

புரட்டுகளையும் தலையாட்டி ஏற்கும் மாக்களாக மக்கள்!

உயர்ந்தவன்,தாழ்ந்தவன் நம் தேசத்தில் கூடாது!

இனியும் அதனை ஏற்க முடியாது!

பாண்டிய நாட்டில் திருஞான சம்பந்தம் எனும் மகான் உள்ளார்!

அவர் சமதர்ம போதனைகளை கற்பிக்கிறார்!

அரபிகள் மகான் முஹம்மது என்பவரும் போதனைகள் செய்கிறார்!

இவைகளை நாம் ஆராய வேண்டும்!''

மன்னர் -
நீண்ட உரையாற்றினார்!

சாதக பாதகங்களை-
கேட்டறிந்தார்!

அரசவை கலைக்கபட்டது!

முக்கிய அமைச்சர்களை-
இருக்கைகள் சுமந்திருந்தது!

சேதுபத்திரர்-
மன்னரிடம் நீட்டினார்-
கைபற்றிய ஓலைச்சுவடியை!

மன்னர் -
படிக்க சொன்னார்-
சேதுபத்திரரையே!

சேதுபத்திரர்!

பிரித்தார்!

பார்த்தார்!

அதிர்ந்தார்!!

(தொடரும்....!!)

Monday, 3 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (18)

மன்னர்-
சொன்னார்!

''குருவே!
உங்களுக்கு-
வசதிகள் செய்யபட்டுள்ளது!

கொஞ்ச காலம்-
''தங்க''வேண்டியுள்ளது!

ராஜ குரு-
உருமினார்!

''அரசே!
நெருப்பிடம் விளையாடுகிறீர்கள்!

''மக்கள் அறிந்தால்-
ஆட்சியில் மண் விழுந்திடும் என்பதை-
நீங்கள் அறிந்திருப்பீர்கள்!

மன்னர் தொடர்ந்தார்-
ஆம்!
மக்கள் அறியனும்-
உனது யோக்கியத்தை!

கிரீட திருட்டில்-
பங்குள்ளதை!

என் கழுத்திற்கு-
காளி , மாரி ரூபத்தில்-
கத்தியனுப்பியதை!

கன்னியர்கள்-
கசக்கி எறியபட்டதை!

ஆட்சியை கவிழ்க்க-
ரகசிய ஒற்றர்படைக்கு-
விஷ்ணுபட்டர் நியமிக்கபட்டதை!

சொல்லிக்கொண்டிருந்த-
மன்னர்-
ராஜ குரு சீடர்களை-
கோப பார்வையால் தாக்கினார்!

சீடர்கள்-
சாஷ்டாங்கமாக விழுந்ததை-
கண்டார்!

மன்னர்களை-
ஆட்டங்காண வைத்த ராஜ குரு-
ஆடிப்போனார்!

''சொல்வதை கேட்டால்-
மடாலயத்தில் அறை!

அடம்பிடித்தால்-
பாதாள சிறை!''

எது வேண்டும்-!?
மன்னர் கேட்டார்!

கடும் எச்சரிக்கை!
கடுமையான நிபந்தனை!

விதித்து அனுப்பினார்!
மன்னர்!

மக்களிடம் -
'சொல்லபோவதையும்''-
விளக்கினார்!

இருவர் சுமக்க!

வலது , இடதாக-
சீடர்கள் நடக்க!

திரையிட்டு-
ராஜ குரு இருக்க!

புறப்பட்டது-
பல்லாக்கு!

மடாலயத்திற்கு!

ராஜ குரு-
உள்ளிருந்தவாரே-
மெதுவாக செல்ல உத்தரவிட்டார்!

மெதுவாக செல்ல!

சீடர்களிடம் -
முக்கிய வேலை சொல்ல!

சீடர்களிடம்-
குரு மகான் உதவி கேட்டார்!

ஆயிரம் பொற்காசுகளுக்கு-
பேரம் பேசினார!

ஒரு சீடர் மறுத்தார்!

மற்றொருவர் -
உறுதி பூண்டார்!

மறுத்தவரையும்-
சம்மதிக்கவைத்தார்!

குரு மகான்-
சர சரவென எழுதி!

விஷ்னுபட்டரிடம் கொடுக்க-
சீடரிடம் கொடுக்கிறார்-
ஓலைச்சுவடி!

பல்லாக்கு அடைந்தது!-
சந்நிதானம்!

எங்கும் கேட்டது-
மக்கள் வாழ்த்து முழக்கம்!

தேச நலனுக்கு மௌன விரதம் இருக்க போகிற குரு மகான்!

வாழ்க! வாழ்க!!

தவத்தில் திளைக்க போகும் குரு மகான்!

வாழ்க! வாழ்க!!

மன்னர் எழுதிய வசனம்!

மக்களும் நம்பி உற்சாகம்!

குரு மகான் அமர்ந்தார்-
மேடை மேலே!

பலி கொடுக்க போகும்-
ஆட்டை போல!

விஷ்ணுபட்டரை-
ராஜ குரு பார்த்தார்!

விஷ்ணுவின்-
அருகிலிருந்தவர்களை கண்டதும்-
உயிரே போனதுபோல் உணர்ந்தார்!

ஏன்!?

அருகில் நின்றது-
பல்லாக்கு தூக்கி வந்தவர்கள்!

ஆம்-
பல்லாக்கு தூக்கிகளாக-
வேடமணிந்த-
தளபதியாரும்!
சிங்கராயரும்!

(தொடரும்....!!)



Sunday, 2 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (17)

''ஆம் !
அரசே!

உங்களை -
''காணாமல்'' போக-
வைக்கவே!

காத்திருந்திருக்கிறார்கள்-
நேற்றிரவே!


மேலும் ஒரு-
பாழான விசயம்!

நடந்துள்ளது-
பலான விசயம்!

அனுசரிப்பவர்களுக்கு-
சன்மானம்!

முரண்டு பிடித்தால்-
''திரும்பாத'' பயணம்!

சொல்லி முடித்தார்!
தளபதியார்!

''பெண் விவகாரம்-
நடந்திருக்காது-என
தலையாட்டினார்-
மன்னர்!

''நடந்துள்ளது''-
இது-
சேதுபத்திரர்!

''காணாமல் போன-
பெண்கள்!

ஓடி போனதாக-
சொல்லபட்டார்கள்!

கடற்கரைதனில்-
பிணமாகவும் கிடந்தார்கள்!

கேள்விகள் மட்டும்-
சுமந்திருந்தார்கள்!

இன்று-
''விடைகளானார்கள்''!

சொல்லி முடித்தார்-
சேதுபத்திரர்!

சிங்கராயர் கூட-
ஆமோதித்தார்!

பெரு மூச்சொன்றை-
மன்னர்-
வெளிபடுத்தினார்!

''எலிக்கு''-
மன்னிக்கவும்-
புலிக்கு கூண்டு வைக்க-
முடிவெடுத்தார்!

பகல்-
இரவை நோக்கி பயணித்தது!

மன்னர் அழைப்பு-
ராஜ குரு காதிற்கு-
சென்றது!

அரண்மனையில்-
சந்திப்பு!

''தனியாக பேச வேண்டுமென-
சேதுபத்திரரை-
ராஜ குரு அவமதிப்பு!

''இருக்கட்டும்''-என
மன்னர்-
தற்காப்பு!

ராஜ குரு-
''அரசே!
இவர்களால் உங்களுக்கு ஆபத்து!''

இதை கேட்ட-
சேதுபத்திரர் சினம் கொண்டார்!

''தேசத்தை-
சீரழிப்பது நீ!

இளம் மங்கையரை-
சீரழிப்பதும் நீ!''

தொடர்ந்தது-
வசை சொற்கள்!

சிவந்தது-
ராஜ குருவின் கண்கள்!

மன்னரிடம்-
சேதுபத்திரரை கைது செய்திட-
உத்திரவிட்டார்!

இல்லையென்றால்-
வெளி நடப்பு-என
நடந்தார்!

மன்னரின் சிரிப்பு-
ராஜ குருவை நிறுத்தியது!

அச்சிரிப்பினில்-
தீர்ப்பு இருந்தது!

(தொடரும்....!!)

மூன்றாம் சேர மன்னன் !! (16)

சிப்பாய் உடையில்-
இருட்டிலி௫ந்து-
காளி வெளிப்பட்டான்!

''காலி'' செய்திட-
இடம் பார்த்தான்!

இடைபட்ட நேரத்தில்-
மாறு வேடத்திலிருந்து-
வேறு வேடம்பூண்டு!

மன்னரும்-
மெய்க்காப்பாளர்களும்-
அர்ச்சகர் கோலத்தில்-
சென்றார்கள்-
கோவில் வாயிலில்-
நுழைந்து கொண்டு!

சூழல் ஏதுவானது!
காளியின் கைகள்-
சைகை காட்டியது!

கிடந்தார்கள்-
காளியின் கூட்டாளிகள்!-
கண்கள் கட்டபட்டு!
கை,கால்கள் இறுக்கபட்டு!

அரபிக்கள்-
துவைத்து இ௫ந்தார்கள்!

கொலைகாரர்கள்-
துவண்டு கிடந்தார்கள்!

காளியை-
கோவில் காவலர்-
சந்தேகித்தார்!

காளியின்-
கத்தி குத்தில்-
சரிந்தார்!

சப்தம் கேட்டு-
மக்கள் கூடுவதற்குள்!

காளி மறைந்தான்-
மற்றொரு இருட்டிற்குள்!


கூடிய மக்களை-
கலைத்தார்கள்!

காவலர்களோடு வந்தார்-
தளபதி மார்த்தாண்ட பூபதியவர்கள்!

அத்ஹம்-
தளபதிக்கு முன் சென்றார்!

தளபதி-
கேள்வியோடு பார்த்தார்!

''தளபதியாரே!
கோழி வாங்க வந்தோம்!
வேட்டை நாய்களை வேட்டையாடினோம்!

நம்பீஸ்வரரையும்!
காவலரையும் !
குதறிய காட்டேரிகள்!

எங்களிடம்-
சிக்கி கொண்டார்கள்!

ஒன்று-
வேட்டையாட போயுள்ளது!

அதற்கென-
நாங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது!''

அத்ஹம் -
தளபதியிடம்-
மெதுவாக சொன்னார்!

தளபதி -
அவ்விடம் நோக்கி சென்றார்!

சிக்கியவர்கள்-
கைது செய்யபட்டார்கள்!

அரபிக்கள்-
எதுவும் தெரியாதது போல்-
மறைந்து கொண்டார்கள்!

மீண்டும்-
அதே இடத்தில்-
பதுங்கினார்கள்!

''மற்றொன்றுக்காக''-
எதிர்பார்த்திருந்தார்கள்!

''மாரியண்ணே!
மாரியண்ணே!-என
காளி வந்தான்!

படீர்,படீர்-என
தாக்கபட்டு-
மல்லாந்தான்!

கோவிலுக்கள்-
மணி சப்தம்!

பூஜை முடியவில்லையென-
அத்ஹம் எண்ணம்!

நேரம் செல்ல செல்ல!

மக்களும் வெளியேறினார்கள்-
மெல்ல மெல்ல!

அர்ச்சகராக கோவிலுக்குள்-
சென்றவர்கள்!

மற்றொரு வழியில்-
காவலர்கள் வேடத்தில்-
வந்தார்கள்!

அத்ஹம் எதிர் வந்தார்!

நடந்தவற்றை சொல்லி-
அணுமதிபெற்று சென்றார்!

காளியை-
அள்ளி சென்றார்கள்!

மெய்க்காவலர்கள்!

விடிந்தது!

அரண்மனையில்-
ஆலோசனை நடந்தது!

''அரபுக்கள்-
அதிரடி அபாரம்!

இக்கொலையாளிகள்-
கழுவிலேற்ற தண்டனையாளர்கள்!

ராஜ குரு தயவால்
ஆயுள் தண்டனை பெற்றார்கள்!

மார்த்தாண்ட வர்மா-
ஆட்சியில் வெளியேறி-
மடாலயத்தில் தங்கியுள்ளார்கள்!

அவர்களது வேலை!
ராஜ குரு -
கையசைக்க!
கொலைகாரர்கள்-
 ''கதை'' முடிக்க!

மற்றொரு செய்தி!
நம்ப முடியாத செய்தி!''

இழுத்தார்-
தளபதியார்!

''நம்பவா!?
வேண்டாமா.!?-
முடிவு பிறகு.!
முதலில் சொல்லும்..!-
இது மன்னர்!

''அது...!
''அது வந்து.....!!

(தொடரும்...!)