Thursday, 31 January 2013

ஹபீப்-குர்சியத் (2)

சில வருடங்களுக்கு-
முன்னால்!

நினைவுகள் பல-
சுழற்றி அடிக்குது-
மனக்கண்கள்-
முன்னால்!

"தாங்கி விட்டு-"
வெளியேற்றுகிறது-
நம்மை-
கருவறைகள்!

பிறப்பே-
நமக்கு தருகிறது-
அழுகைகள்!

அழுகையே-
ஆரம்பமென்றால்-
"அது" இல்லாமல்-
இருக்குமா!?-
வாழ்க்கைகள்!

மடியிலும்-
மார்பிலும்-
தூக்கி வளர்த்தவர்கள்!

நம்மை-
குழந்தையின்போது-
உறவுகள்!

பாசத்தை-
"கொட்டி"-
வளர்த்தார்கள்!

ஒரு நாள்-
"பிரிவோம் என்றா!?-"
அப்படி செய்திருப்பார்கள்!?

தொட்டிலாகும்-
அப்பாமார்கள்-(தாத்தா)
கைலிகள்!

போர்வையாகும்-
ஆச்சாமார்கள்-(பாட்டி)
பிறை போட்ட-
தாவணிகள்!

விரல் பிடித்து-
நடக்கவைத்தவர்கள்!

இன்று-
கம்பு ஊன்றி-
நடப்பவர்கள்!

தாய் பறவை-
குஞ்சுகளை-
கூட்டிலிருந்து-
தள்ளி விடுமாம்!

குஞ்சு கீழே-
விழட்டும் என்றல்ல-
சிறகு விரிக்கவே-
அப்பயிற்சியாம்!

நம்மையும்-
பாடசாலையிலும்-
சேர்த்தார்கள்!

"பிரிவை"-
 தாங்கிடும்-
பயிற்சியா-
கொடுக்கிறார்கள்!?

பல-
கருவறையிலிருந்து-
வந்த-
வளர்ந்த-
வரவுகள்!

பள்ளிக்கூடத்திலும்-
மதரசாக்களிலும்-
இணைகிறது-
நட்பு எனும்-
உறவுகள்!

(நினைவுகள் சுழலும்....)





Wednesday, 30 January 2013

ஹபீப்-குர்சியத்!(1)

2013-
சனவரி-
இருபத்திமூன்றாம் தேதி!

இரவு -
நேரமது!

அலைபேசி -
அலறியது!

அது-
அலறல் செய்தியை-
தாங்கி வந்தது!

மறு முனையில்-
என்னுடன்-
பிறந்தவன்!

படபடப்புடன்-
அச்செய்தியை-
சொன்னவன்!

மேகங்கள்-
வானில் மிதக்கவே-
செய்கிறது!

அத்தகவலை-
கேட்டபின்-
என் நிலை -
நிலைகொள்ளாமல் ஆனது!

ஹபீப்-
உன்அலைபேசிக்கு-
அழைத்தேன்!

சிறிது-
நேரத்திற்கு பின்னே-
எடுத்தாய்!

பேசிடமுடியாமல்-
தவித்தாய்!

பின்புறத்தில்-
அழுகை-
சப்தம் கேட்டேன்!

"உறுதியென-"
அறிந்தேன்!

ஹபீப்-
உன்னை காணவே-
விரைந்தேன்!

நெஞ்சில்-
இமயத்தின்-
பாரத்தை-
சுமந்தேன்!

நாம்-
அழுததில்லை!-
எத்தனை முறை-
தோற்றும்!

அன்று-
கண்ணீரை-
 மறைக்க முடியாமல்-
தோற்றோம்!

ஹபீப் -
"உன்னவளுக்காக"-
எவ்வளவோ-
இழந்தவன்-
நீ!

இன்று-
"உன்னவளையே"-
இழந்து நிற்க்கிறாயடா-
நீ!

உலகம்-
ஒரு நாள்-
"இவ்வெழுத்தை"-
படிக்கலாம்!

உன் நேசத்தையும்-
என் பாசத்தையும்-
அறியலாம்!

எத்தனையோ-
காவியங்கள்-
இவ்வுலகில்-
உண்டு!

எழுதுகிறேன்-
நம் வாழ்வையும்-
பகிர்ந்து செல்வோமே-
என்று!

(நினைவுகள் சுழலும்....)





Tuesday, 29 January 2013

விஷ-ரூபம்! (7)


கமல் அவர்களின்-
ரசிகர்களே!

அபிமானிகளே!

இது-
சாமானியனின்-
கேள்விகளே!

கேட்கிறார்கள்-
இதுவரைக்கும்-
"இது"போன்ற படங்கள்-
வரவில்லையா!?

அப்போது-
"இவர்களுக்கு"-
கோபம் வரலையா!?

உறவுகளே-
இதை கொஞ்சம்-
படிக்கிறீகளா!?

தப்பான உறவு-
"வாலி"யில-
இல்லையா!?

"கலாபகாதலனில்-"
இல்லையா!?

"உயிர்"ல-
இல்லையா!?

சிந்து சமவெளியில-
இருந்ததில்லையா!?

இவைகளெல்லாம்-
தணிக்கை குழு-
அனுமதிததில்லையா!?

சிந்து சமவெளி-
ஓடிய திரையரங்குகள்-
தாக்கபடலையா!?

இயக்குனர் கூட-
தலைமறைவு -
ஆனாரில்லையா!?

இச்சமூகம்-
இவ்வாறாக-
போராடலியே!

சட்டப்படி-
எதிர்ப்பதும்-
ஒன்றும்-
தப்பில்லையே!

அடாவடி-
செய்பவர்கள்-
அரசியல் கட்சியாம்!

ஜனநாயக வழி-
போனால்-
வாய்க்கு வந்தபடியெல்லாம்-
திட்டலாம்!!

என்ன கொடுமை-
இது-
எனலாம்!

எதிர்க்கவில்லை-
ஒட்டுமொத்த-
திரைத்துறையை!

ஒட்டுமொத்தமக்களும்-
எதிர்க்கணும்-
எச்சமுதாயதிற்கு-
எதிராகவும்-
விதைக்கப்படும்-
விஷ வித்துகளை!

/////////////////////முற்றும்//////////////////

Monday, 28 January 2013

விஷ-ரூபம்(6)

"ஆதிபகவானுக்கு"-
பிரச்னை-
பத்திரிகை-
செய்தி!

கமனாலும் சரி!
அமீரானாலும் சரி!

எவர் -
சமூகத்தில்-
பிணக்கை-
உருவாக்கும்படி-
செய்தாலும் சரி!

அப்படத்திற்கு-
தடை விதி!

இனவெறியாகாது-
தன் சமூகத்தை-
நேசிப்பது!

இன வெறியாகும்-
தன் சமூகம் செய்யும்-
தவறையும்-
ஆதரிப்பது!

இதுவே-
நபிகளாரின்-
போதனையாகும்!

இன்று -
பேசபடுது-
தேசவெறி!
மதவெறி!

நியாயவான்களுக்கு-
தேவை-
வெறியல்ல-
நெறி!

சமூகத்தின்-
அமைதியை-
கெடுக்காத-
நெறி!

மனிதனை-
மனிதன்-
அடிமைபடுதாத-
நெறி!

மொழியால்-
நிறத்தால்-
இனத்தால்-
பிரிக்காத-
நெறி!

பெரும்பான்மை-
சிறுபான்மை-
பிரித்து பார்க்காத-
நெறி!

திரு. கமல் சகோதரரே!
ஒரு விஷயத்தை-
நினைத்தீரா!?

ஏன் உங்கள்-
சகோதர சமூகம்-
வெறுப்பாச்சி!?

முதலில்-
ஹேராம்-
அச்சமூகத்தின்-
தலையில்-
மண்ணை-
போட்டுச்சி!

பிறகு-
"உன்னை போல் ஒருவன்-"
கண்ணுல-
மண்ண போட்டுச்சி!

இப்போது-
விஸ்வரூபம்-
மொத்தமா -
வாயில மண்ணள்ளி-
போட்டுடுச்சி!

ஆரம்பத்தில்-
"அவர்கள்"-
பத்திரிக்கை வாயிலாக-
எதிர்த்தாக!

இப்போ-
சட்டப்படி-
எதிர்க்குறாக!

ஒரு தடவை-
நடந்தால்-
தவறு!

திரும்ப-
திரும்ப-
நடந்தால்-
அதன் பேரு.....!!?

(தொடரும்.....)

//குறிப்பு-புதிதாக பின்னூட்டம் இடுபவர்கள் இத்தொடரை முழுவதும் படித்தால் சிறப்பாக
இருக்கும்.///





விஷ-ரூபம்!(5)

திரு,
உலக நாயகனே!

இதை எழுதுவது-
உங்கள் இஸ்லாமிய-
சகோதரனே!

எதிர்க்கவில்லை-
கமல் எனும்-
கலைஞனை!

எதிர்ப்பது-
விஸ்வரூபம் எனும்-
கலைப்படைப்பை!

மதிக்கிறேன்-
கலாம் அவர்களை!

வியந்தேன்-
ஜனாதிபதியாக-
உயர்ந்ததை!

ஆட்சேபிக்கிறேன்-
அவர் -
ஆதரிக்கும்-
அணு உலையை!

கலாம் அவர்களுக்கு-
தேச வளர்ச்சி-
முக்கியம்!

எனக்கோ-
மக்களின்-
உயிர் முக்கியம்!

இதில்தான்-
வித்தியாசம்!

பிடிக்கும்-
கலைஞர் அவர்களிடம்-
"இருந்த"-
போராட்ட குணம்!

பிடிக்கவில்லை-
"பாசத்திற்காக"-
மாறுகின்ற-
மனம்!

பிடிக்கும்-
ஜெயலலிதா அவர்கள்-
மலிவு விலையில்-
உணவு விற்க-
அறிவித்ததை!

பிடிக்கவில்லை-
இலவச பேரில்-
மக்களை சோம்பேறி -
ஆக்குவதே!

பிடித்தது-
ராமதாஸ் அவர்களை-
"டாஸ்மாக் " எதிர்ப்பு-
காட்டியது!

பிடிக்கவில்லை-
சாதி வெறி சண்டையை-
மூட்டுவது!

"பிடித்தவர்" என்பதால்-
"செய்வதையெல்லாம்-"
நியாயம் படுத்த முடியாது!

"பிடிக்காதவர்"என்பதால்-
"செய்யும் நல்லதை"-
எதிர்க்க முடியாது!

நம்ம வீடுதானே-என
கழிவறையில்-
தூங்கிட மாட்டோம்!

நடு வீட்ல-
"கழிந்திடவும்"-
மாட்டோம்!

மீண்டும்-
சொல்லிகொள்கிறேன்!

எதிர்க்கவில்லை-
கலையை!

எதிர்ப்பது-
விதிக்கப்படும்-
"நச்சு விதைகளை"!

(தொடரும்.....)




விஷ-ரூபம்! (4)

"தே....மகன்-
அவன்-என
ஆங்கிலத்தில்-
ஸ்ரீ ப்ரியா-
சொன்னாக!

"நாலு பேரை-
வெட்டனும்தான்-
வந்தேன்-என
விஜயகுமார்-
சொன்னாக!

"ஈன பசங்க"-என
சூர்யா சொன்னாக!

"உன் அம்மா-
அக்கா-
ஆயா(பாட்டி)-
கூ...கொடுடா-
விவேக் சொன்னாக!

ஸ்ரீ ப்ரியா-
"சொன்னதையும்"-
எழுதியவன்-
குடும்ப உறுப்பினர்கள்-
குட்டி ஜட்டி-
ப்ரா போடணும்னு-
சத்யராஜ் சொன்னாக!

இது-
எப்போ நடந்ததுன்னு-
சொல்லுங்க!?

இல்லை-
மறந்தோமாங்க!?

இல்லை-
நாமெல்லாம்-
நடிக்கிரோமாங்க!?

புவனேஸ்வரி-
கைது செய்யப்பட்டபோது!

தப்பான தொழிலாளியாக-
சில நடிகைகளை-
தினமலர் செய்தி வெளியிட்டபோது!

"ஆபாபாச அர்ச்சனை"-
நடத்தினார்கள்-
நடிகர் சங்க-
கண்டன பொதுகூட்டதின்போது!

ஓ!
கருத்துரிமை-
பேசுவோர்களே!

அது படம்தானே-என
பிதற்றுவோரே!

இப்ப-
சொல்லுங்க-
அப்பத்திரிக்கை-
சொன்னது-
பத்திரிகை சுதந்திரம்-என
ஒதுங்கலாமே!

இல்லைஎன்றால்-
"ஆதாரங்கள் கேட்டு"-
வழக்கு தொடுக்கலாமே!

"தனக்கு -
தனக்கு-என்றால்தான்
படக்கு-
படக்குன்னு-
இருக்கும்!

தலைவலியும்-
வயித்தவலியும்-
வந்தவனுக்குதான்-
வலிக்கும்!

மற்றவங்களுக்கு-
வந்தால்-
வேடிக்கையாதாய்யா-
இருக்கும்!

அதே பத்திரிக்கை-
இணையத்தில்-
நபிகள் நாயக-
கேலி சித்திரம்-
வெளியிட்டார்கள்!

இஸ்லாமிய இயக்கத்தினர்-
ஆர்பாட்டம்-
நடத்தினார்கள்!

ரத்தம்-
சொட்ட-
சொட்ட-
காவல்துறையால்-
தாக்கபட்டார்கள்!

ஆபாச அர்ச்சனை-
செய்த அவர்கள்-
யோக்கியவாதியா!?

ஜனநாயக வழி-
போராடிய-
போராடும்-
இச்சமூகம்-
தீவிரவாதியா!?

(தொடரும்.....)




Sunday, 27 January 2013

விஷ-ரூபம்! (3)

கேள்விகள்-
விழுகிறது-
செவிகளின்-
வழியே!

தணிக்கை குழு-
அனுமதித்ததை-
எதிர்பதையே!

அக்குழுவின்-
அனுமதித்ததை-
எதிர்ப்பது-
கொலை குற்றமா!?

இல்லை-
தேச விரோதமா!?

அப்போ-
பின்வருபவை பற்றி-
கொஞ்சம் சிந்திப்போமா!?

"நியூ " படம்-
வெளிவந்தபின்-
ஏன் எதிர்ப்புகள்!?

பருத்தி வீரன்-
கூட்டு கற்பழிப்புக்கு-
ஏன் எதிர்ப்புகள்!

நயன் -
உதட்டை-
சிம்பு கடித்தாரு!

"வல்லவன் "-
சுவரொட்டியா-
ஊரெல்லாம்-
ஒட்டினாரு!

அப்போது-
ஏன் அவர்-
எதிர்க்கபட்டாரு!

"எவண்டி உன்னை பெத்தான்-
கையில கிடச்சா செத்தான்!"-
என்ற வரிகள்!

"பால் போன்ற தேகம்தாண்டி-
உடம்பு!
அதில் பாலாடை கொஞ்சம்-
விலக்கு"-
என்ற வரிகள்!

"பாவாடை கெட்டையில-
பார்த்தேனே மச்சம்-
ஆனாலும் நெஞ்சுக்குள்ளே-
ஏனோ அச்சம்"-என்ற
வரிகள்!

எதற்கு-
எதிர்ப்புகள்!?

தணிக்கை குழுவை-
நம்பி இருக்கலாமே-
அறிவு ஜீவிகள்!!

அனுமதித்த பிறகும்-
எதற்கு எதிர்ப்புகள்!?

மற்றவர்கள்-
எதிர்த்தால்-
ஜனநாயக போராட்டமா!?

பாதிக்கப்பட்ட-
சமூகம்-
எதிர்ப்பது-
கலாசார தீவிரவாதமா!?

இதுதான்-
உங்கள் நியாயமா!?

இல்லை-
விதண்டவாதமா!?

(தொடரும்...)