Sunday 27 January 2013

விஷ-ரூபம்! (3)

கேள்விகள்-
விழுகிறது-
செவிகளின்-
வழியே!

தணிக்கை குழு-
அனுமதித்ததை-
எதிர்பதையே!

அக்குழுவின்-
அனுமதித்ததை-
எதிர்ப்பது-
கொலை குற்றமா!?

இல்லை-
தேச விரோதமா!?

அப்போ-
பின்வருபவை பற்றி-
கொஞ்சம் சிந்திப்போமா!?

"நியூ " படம்-
வெளிவந்தபின்-
ஏன் எதிர்ப்புகள்!?

பருத்தி வீரன்-
கூட்டு கற்பழிப்புக்கு-
ஏன் எதிர்ப்புகள்!

நயன் -
உதட்டை-
சிம்பு கடித்தாரு!

"வல்லவன் "-
சுவரொட்டியா-
ஊரெல்லாம்-
ஒட்டினாரு!

அப்போது-
ஏன் அவர்-
எதிர்க்கபட்டாரு!

"எவண்டி உன்னை பெத்தான்-
கையில கிடச்சா செத்தான்!"-
என்ற வரிகள்!

"பால் போன்ற தேகம்தாண்டி-
உடம்பு!
அதில் பாலாடை கொஞ்சம்-
விலக்கு"-
என்ற வரிகள்!

"பாவாடை கெட்டையில-
பார்த்தேனே மச்சம்-
ஆனாலும் நெஞ்சுக்குள்ளே-
ஏனோ அச்சம்"-என்ற
வரிகள்!

எதற்கு-
எதிர்ப்புகள்!?

தணிக்கை குழுவை-
நம்பி இருக்கலாமே-
அறிவு ஜீவிகள்!!

அனுமதித்த பிறகும்-
எதற்கு எதிர்ப்புகள்!?

மற்றவர்கள்-
எதிர்த்தால்-
ஜனநாயக போராட்டமா!?

பாதிக்கப்பட்ட-
சமூகம்-
எதிர்ப்பது-
கலாசார தீவிரவாதமா!?

இதுதான்-
உங்கள் நியாயமா!?

இல்லை-
விதண்டவாதமா!?

(தொடரும்...)





4 comments:

  1. "துப்பாக்கி"-
    சுட்ட ரணங்களே-
    இன்னும் ஆறவில்லை...

    தோழரே உங்களது வேதனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செய்யும் ஊடக பயங்கரவாதம் இது. தன்னை முற்போற்கு வாதியாக அடையாளப்படுத்திய கமலிடம் இருந்து இது வெளிப்பட்டு இருப்பதுதான் கவலைக்கூரியது.

    ReplyDelete
  2. உதாரணங்களுடன் அருமையான விளக்கம்! என்ன ஆகும்னு பார்ப்போம்!

    ReplyDelete