Monday 21 January 2013

இது விவாதமல்ல.....!!

கருவே-
கல்லறை-
"கரு"-
பெண் சிசுவென்றால்!

தப்பினாலும்-
கள்ளிப்பால்-
கருவறுக்குது-
பெண் குழந்தைஎன்றால்!

விரண்டோடிய-
"பேருந்தொன்று"!

தப்பிக்க-
வழி இல்லை-
அப்பெண்ணுக்கு -
என்று!

கற்பழிப்பு-
ஓட ஓட!

கண்ணை-
மூடிக்கொள்கிறார்கள்-
மதச்சாயம்-
"பூசிட"!

யாராக-
இருந்தாலும்!
பெண்தானே!

வித்தியாசம்-
பார்ப்பது-
வீணே!

நிர்மூலமாக்கப்பட்டு!
நிர்வாணமாக்கப்பட்டு!

கிடப்பவர்கள்-
எத்தனையோ-
சூறையாடப்பட்டு!

தெருக்களில்-
பிணமாக்கபட்டு!

காதல் ரசமாக-
பேசிக்கொண்டு!

காம ரசம்-
பகிர்ந்து கொண்டு!

"கைகழுவபடுது"-
"காரியங்கள்"-
முடித்துக்கொண்டு!

ஒரு முறை-
சேலை உருவியவன்-
துரியோதனன்-
வில்லனா!?

எத்தனையோ முறை-
உருவி விட்டு-
உலாவ விடுபவன்-
"இயக்குனனா!?"

பதினைந்தே ஆன-
சிறுமி -
நடித்த காட்சி!

உதத்தோடு-
உதடு-
முத்தகாட்சி!

சில நாட்களில்-
வரக்கூடிய-
கடல் படத்துலதான்-
அக்கேவலகாட்சி!

"கேவலபடுத்தியவனுக்கு-"
கிடைக்கலாம்-
விருது!

சபலத்தை பார்த்து-
சபலம் தலைக்கேறியவனுக்கு-
சபலங்கொண்டால்-
கைது!!

பெண்ணென்றால்-
அவ்வளவு-
கேவலமா!?

அப்பெண்ணின்-
வழி வந்த-
ஆண்களே-
நாம் மட்டும்-
புனிதமா!?

இது-
ஆணா-
பெண்ணா!?-
விவாதம்-
அல்ல!

இரு பாலினமும்-
ஓரினம் என்பது-
பொய்யில்லை!

அதனதன்-
தன்மையில்-
இருந்துகொண்டால்-
தப்பு நடக்க-
வாய்ப்பில்லை!

கற்பு-
ஆணுக்கும்-
பெண்ணுக்கும்
ஒன்றுதான்-
யாரும்-
மறுப்பதற்கில்லை!

ஆனால்-
ஆண் -
பெண்களிடம் மட்டும்-
எதிர்பார்ப்பது-
நியாயமில்லை!




12 comments:

  1. அதனதன்-
    தன்மையில்-
    இருந்துகொண்டால்-
    தப்பு நடக்க-
    வாய்ப்பில்லை!

    அனைவரும் உணர வேண்டிய உண்மை.

    ReplyDelete
    Replies
    1. sasi sako..!

      mikka nantri!

      ungal karuthirkku ....

      Delete
  2. ஆனால்-
    ஆண் -
    பெண்களிடம் மட்டும்-
    எதிர்பார்ப்பது-
    நியாயமில்லை!
    //சரியாகச்சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. saadiqa sako..!

      mikka nantri !

      ungal karuthirkku...!

      Delete
  3. சிறப்பான விவாதம்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. suresh sako..!

      mikka nantri sako..!

      ungal karuthirkku..!

      Delete
  4. பெண்ணென்றால்-
    அவ்வளவு-
    கேவலமா!?

    அப்பெண்ணின்-
    வழி வந்த-
    ஆண்களே-
    நாம் மட்டும்-
    புனிதமா!?

    இது மட்டுமல்லா. எல்லா வரிகளும் சிறப்பாய் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. aruna sako..!

      mikka nantri sako..!

      ungal aatharavirkku...!

      Delete
  5. நன்று சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. kuttan !

      mikka nantri!

      ungal karuthirkku...!

      Delete
  6. //ஆனால்-
    ஆண் -
    பெண்களிடம் மட்டும்-
    எதிர்பார்ப்பது-
    நியாயமில்லை!//

    சரியாகச் சொன்னீர்கள்....

    ReplyDelete