Wednesday 16 January 2013

மறுத்தால் ஏது.....!?

வார்த்தைகள்-
ஏது!?-
உதடுகள்-
இணைந்திட-
மறுத்தால்..!

மரங்கள்-
ஏது!?-
மண்-
தாங்கிட-
மறுத்தால்..!

மழலைகள்-
ஏது!?-
பிரசவவலியை-
தாய்மை-
தாங்கிட-
மறுத்தால்..!

எழுத்துக்கள்-
ஏது!?-
பேனா மையை-
கசிந்திட-
மறுத்தால்..!

வான் மழை-
ஏது!?-
பூமி நீரை-
ஆவியாக்கிட-
மறுத்தால்..!

சிற்பம்-
ஏது!?-
பாறை கற்கள்-
சில பாகங்களை-
இழந்திட-
மறுத்தால்..!

லட்சியம் வெல்வது-
எப்போது!?-
நாம் அதனை-
நோக்கி பயணிக்க-
மறுத்தால்...!!!

14 comments:


  1. பாராட்ட மறுத்தால் ஏது கவிதை ?

    ReplyDelete
    Replies
    1. sravaani sako!

      ungal udanadi varavirkku mikka nantri!

      Delete
  2. கவிதை அருமையாக உள்ளது .

    ReplyDelete
  3. சூப்பர் கவிதை
    நல்ல சிந்தனை மர்றும் கவிப் புலமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உங்கள் கவிதை மிக மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  5. சிறப்பான சிந்தனை.... பாராட்டுகள் சீனி....

    ReplyDelete
  6. மறுத்தால் எதுவுமில்லை.ஏற்றுக்கொண்டு பரீட்சித்துப்பார்த்தலே வாழ்வு !

    ReplyDelete