Sunday 13 January 2013

சிந்தித்தால் மட்டுமே....!!!?

மண்ணும்-
மலைகளும்-
மூடி இருப்பதால்-
மௌனித்து-
விடுகிறதா-
எரிமலைகள்!?

தூரத்தை எண்ணி-
இரை தேடலை-
நிறுத்திவிடுகிறதா-
பறவைகள்!?

மேகங்கள் -
மறைப்பதால்-
மாசுபடிந்ததா-
சூரிய கீற்றுகள்!?

இலையில்-
சோறு கிடைக்கலியே-என
"சும்மா " இருக்கிறதா-
எறும்புகள்!?

கூண்டில் அடைந்து-
கிடந்தாலும்-
தன் கர்ஜனையை-
நிறுத்திடுதா-
சிங்கங்கள்!?

அணை வைத்து-
அடைத்தாலும்-
அடங்கிடுதா-
நதிகள்!?

வெட்டுவதால்-
துளிர் விடாமல்-
இருக்குமா-
மரகிளைகள்!?

பறிப்பார்கள் -என
தெரிந்தும்-
மலராமல்-
இருக்கிறதா-
பூ மொட்டுக்கள்!

படைப்புகளிடம்-
பிரதிபலிக்கிறது-
அதன் தன்மைகள்!

""படைப்புகளில்-
சிறந்த படைப்பு-
மனிதர்கள்!""

அவை-
படைப்பை பற்றி-
"படைத்தவன் -"
சொன்னவைகள்!

மனிதர்களே-
நமக்குள்-
இருக்காதா-
திறமைகள்!?

சிந்தித்தால்-
மட்டுமே-
சிக்கிடும்-
அவைகள்..!!



8 comments:

  1. அருமை... அருமை...

    எல்லா வரிகளும் சூப்பர்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை சீனி..... பாராட்டுகள்.

    ReplyDelete
  3. கவிதை மிக மிக அருமை....உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. malar sako!

      mikka nantri

      ungalukkum en manamaarntha vaazhthukkal!

      Delete