Monday 14 January 2013

புண்ணியமில்லை....!!

மொத்தவலிகளையும்-
சுத்தமாக-
அனுபவித்து விடுகிறாள்-
நம்மை -
பெற்று எடுக்கையிலே!

அதனால்தானோ-!?
பெத்த புள்ளை-
பாசம் மறந்தும்-
பிரிஞ்சு போகையிலே!

அவ்வலியை கூட-
மறைத்து கொள்கிறாள்-
தன் முந்தானையிலே!

கூரை ஏறி -
கோழி பிடிக்கதெரியாதவன்-
வானம் ஏறி வைகுண்டம்-
போனானாம்!-என்று
சிலர்-
சொல்வதுண்டு!

அதுபோலவே-
"மதிக்க வேண்டியவளை"-
ஒதுக்கி வைத்து விட்டு-
புனிதத்தலங்கள் செல்வதால்-
புனிதம் அடைவதாக-
நினைப்பவர்களும்-
இவ்வுலகில் உண்டு!



6 comments:

  1. உண்மையே ! புரிந்து கொள்ள மறுக்கின்றனர் !
    அழகாய் எடுத்து உரைத்தீர்கள் சீனி !

    ReplyDelete
    Replies
    1. srvaani sako!

      ungal udanadi karuthurkku mikka nantri!

      sako..!

      Delete
  2. மிக மிக உண்மை......நல்லா சொன்னிங்க....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. சிறப்பாய்ச் சொன்னீர்கள் சீனு....

    ReplyDelete