Thursday 31 January 2013

ஹபீப்-குர்சியத் (2)

சில வருடங்களுக்கு-
முன்னால்!

நினைவுகள் பல-
சுழற்றி அடிக்குது-
மனக்கண்கள்-
முன்னால்!

"தாங்கி விட்டு-"
வெளியேற்றுகிறது-
நம்மை-
கருவறைகள்!

பிறப்பே-
நமக்கு தருகிறது-
அழுகைகள்!

அழுகையே-
ஆரம்பமென்றால்-
"அது" இல்லாமல்-
இருக்குமா!?-
வாழ்க்கைகள்!

மடியிலும்-
மார்பிலும்-
தூக்கி வளர்த்தவர்கள்!

நம்மை-
குழந்தையின்போது-
உறவுகள்!

பாசத்தை-
"கொட்டி"-
வளர்த்தார்கள்!

ஒரு நாள்-
"பிரிவோம் என்றா!?-"
அப்படி செய்திருப்பார்கள்!?

தொட்டிலாகும்-
அப்பாமார்கள்-(தாத்தா)
கைலிகள்!

போர்வையாகும்-
ஆச்சாமார்கள்-(பாட்டி)
பிறை போட்ட-
தாவணிகள்!

விரல் பிடித்து-
நடக்கவைத்தவர்கள்!

இன்று-
கம்பு ஊன்றி-
நடப்பவர்கள்!

தாய் பறவை-
குஞ்சுகளை-
கூட்டிலிருந்து-
தள்ளி விடுமாம்!

குஞ்சு கீழே-
விழட்டும் என்றல்ல-
சிறகு விரிக்கவே-
அப்பயிற்சியாம்!

நம்மையும்-
பாடசாலையிலும்-
சேர்த்தார்கள்!

"பிரிவை"-
 தாங்கிடும்-
பயிற்சியா-
கொடுக்கிறார்கள்!?

பல-
கருவறையிலிருந்து-
வந்த-
வளர்ந்த-
வரவுகள்!

பள்ளிக்கூடத்திலும்-
மதரசாக்களிலும்-
இணைகிறது-
நட்பு எனும்-
உறவுகள்!

(நினைவுகள் சுழலும்....)





6 comments:

  1. தொப்புள் கொடி அறுபட்டது முதல்
    தொடரும் சிந்தனையின் நீட்சி
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை.... தொடர்கிறேன்....

    ReplyDelete