Wednesday 2 January 2013

முகலாயர்களே....(25)

பிரித்தாளும்-
சூழ்ச்சி!
(hate policy)

கொலைகாரர்கள்-
தயாராவது-
விஷம செய்திகளை-
விதைச்சி!

ஒருவர்-
ஒரு நாயை-
அடிப்பாரேயானால்!

அடுத்தவர்-
தடுப்பார்-
மிருகங்களை-
நேசிப்பவரானால்!

அந்த நாயை-
சிலகாலம்-
அவதூறுகள்-
பரப்பி!

வெறி நாய்!
சொறி நாய்!
கடி நாய்!
ஆளை கடித்து-
கொல்லும் நாய்!-என
மக்களை-
திசை திருப்பி!

அந்நாயை-
அடித்து கொன்றால்-
தடுப்பவர்-
யாரும் இரார்!

அனைவரும்-
கண்டும் காணாததுபோல்-
செல்வார்! 

அது போலவே-
ஒரு சமூகத்தை-
பிற்போக்குவாதி!
தீவிரவாதி!
பயங்கரவாதி!-என்று
செய்திகள்-
பரப்புகிறார்கள்!

பிறகு-
"ஏதோ" -
ஒரு காரணம்-
சொல்லி-
கொல்கிறார்கள்!

மற்ற மனிதநேயமக்களும்-
குரல் கொடுக்க-
தயங்குகிறார்கள்!

இதில் விதிவிலக்கு-
ஒரு சில -
மனித உரிமை-
ஆர்வலர்கள்!

வாணிபம்-
செய்ய வந்த-
வெள்ளையர்கள்!

கொஞ்சம் கொஞ்சமாக-
தேசத்தை-
விழுங்க ஆரம்பித்தார்கள்!

அதில்-
சில வழிகள்!

குறுநில-
மன்னர்களை-
குழிபறித்தார்கள்!

சாதிய சண்டைக்கு-
எண்ணெய் ஊற்றினார்கள்!

பிறகே-
மக்கள் -
பொதுவான எதிரியை -
அறிந்தார்கள்!

அதன் பிறகே-
சுதந்திர போருக்கு-
ஆயத்தம்-
ஆனார்கள்!

வெள்ளையர்கள்-
"நிரந்தர விஷத்தை-"
விதைக்க முனைந்தார்கள்!

இரு பெரும் -
சமூகத்தை-
பிளக்க -
வழிகள்-
செய்தார்கள்!

அங்கேதான்-
வரலாற்றை-
"திரித்தார்கள்"!

இறந்த உடல்களையே-
இரக்கம் இன்றி-
"நாசம்" செய்த-
அவர்களுக்கு!

"திரித்து" எழுதுவதில்-
சிரமம் இல்லை-
அவர்களுக்கு!

இன்றும்-
அவ்வரலாற்றை-
வைத்து கொண்டு-
வகுப்புவாதத்தை-
வளர்கிறார்கள்-
சிலர்!

அதன் விளைவோ-
"அனைத்தையும்"-
இழந்தவர்கள்-
பலர்!

சொல்லிவிட்டேன்-
எனக்கு தெரிந்த-
உண்மையை-
உங்களிடம்!

சீர்தூக்கி பார்க்க-
கேள்விகளை-
 கேட்டு கொள்ளுங்கள்-
உங்கள் -
மனசாட்சியிடம்!

--------------முற்றும்-----------------

4 comments:

  1. உண்மைதான்! இப்போது கூட வெள்ளையர்கள் ஜாதி வெறி மூட்டி இந்தியாவை துண்டாட முயல்வதாக எதிலோ படித்தேன்! நாம் தான் விழிப்பாய் இருக்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. suresh sako!

      thodarnthupadiththa anoirkku mikka nantri!

      Delete
  2. சீனி கவிதையின் "காரம் "
    மனத்தின் அடி ஆழம் வரை பாய்ந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayya...

      neenda idaivrlikku pin vanthamaikku mikka nantri ayya!

      Delete