Monday 7 January 2013

துளிகள்.....!!

நெடுஞ்சாலை-
நெடுகிலும்-
விழுந்திருக்கும்-
மழை துளிகள்!

பூக்களின் மேல்-
தெளிக்கப்படும்-
நீர் -
துளிகள்!

பாட்டில்-
நிரப்பும்-
போட்டியில்-
மழலைகள்-
சிந்திடும்-
தண்ணீர்-
துளிகள்!

புற்களின் மேல்-
இருக்கும்-
பனி துளிகள்!

உச்சியில் -
விழுந்து-
உயிர் கூச்செறியும்-
அருவியின்-
துளிகள்!

மரகிளைகளின் கீழ்-
செல்கையில்-
ஈரமாக்கிடும்-
இலையில்-
மறந்திருக்கும்-
துளிகள்!

இத்தனை-
துளிகளும்-
நெருக்கத்தையும்-
நெருடலையும்-
தருகிறது!

என்னவளே-
உன் முகத்தில்-
துளிர்விடும்-
வியர்வை துளிகள்!

No comments:

Post a Comment