Friday 9 December 2011

ஓடி போலாமா.....?

பரிதவிப்பார்கள்-
பார்வைகளுக்காக!

பாதி உலகை-
ஆள்வதாக-
எண்ணி கொள்வார்கள்!

பார்வைகள்-
பார்த்து கொண்டாலே!

கால் தூசாக -
தோணும்-
பணம் -
காசெல்லாமே!

காதலை -
எதிர்ப்பவள்!

நஞ்சை கொடுத்தவள்-
போல் -
தெரிவாள்!

நெஞ்சுல பால-
கொடுத்தவளும்!

உதறிட சொல்லும்-
ஊர் உலகையும்!

காதலே-
உலகமாக-
தோணும்!

அட்டை கத்திகளுக்கு-
அரண்டது போக-!

அரிவாளையும்-
முத்தமிட செய்யும்!

உதவுபவர்கள்-
மட்டும் -
தெரிவார்கள்-
உத்தமர்களாக!

எதிர்ப்பவர்களோ-
தெரிவார்கள்-
பரம எதிரியாக!

கனவுகள் வரும்-
கண்ணை-
முழித்து கொண்டு-
இருக்கையிலேயே!

காதலிப்பவர்கள்தான்-
வருவார்கள்-
அந்த-
கனவிலும் கூட!

காதல்-
அடி முட்டாளையும்-
அறிவாளியாக்கும்!

அறிவாளியையும் -
அடி முட்டாளாக்கும்!

முகம் பாக்குற -
கண்ணாடியும்!

ஒருவரை ஒருவர்-
முகம் பார்த்து கொள்ளும் வரை-
இருக்கும்-
முன்னாடியே!

இத்தனை -
வருட -
வாழ்வும்!

நேசிப்பவர்கள்-
ஒத்த வார்த்தையில் கூட -
வீழும்!

காதல் -
காவியம் படைத்ததுண்டு!

கல்லறைகளையும்-
தந்ததுண்டு!

நமக்கு-
காவியம்-
படிக்க -
தெரிந்ததே-
ஒழிய!

கல்லறையின்-
கதறல்கள்-
கேட்பதில்லை!

வரமாக-
தெரிந்த -
காதலும்!

பாரமாக-
 தெரியும்-
அதே காதல்!

உயிர் காதல் என்று -
ஓடி விடுவார்கள்-
ஊரை விட்டு!

ஒரு உயிரை --
வயித்துல கொடுத்துட்டு-
ஓடிடுவான்-
அவளை விட்டு!

எண்ண வேண்டாம்-
கொச்சையாக எழுதுவதாக!

பச்சை உண்மை -
அதுதான்!

விவாகரத்து -
வழக்குல!

எழுபத்தஞ்சு சதவிகிதம்-
காதல் திருமணத்துல!

வந்த வழக்கு-
இத்தனை!

வராத வழக்கு-
எத்தனையோ!

உங்களுக்கு-
தெரியுமா!

கூட்டி கொண்டு போய்-
குடும்பம் நடத்துவது -
எத்தனை ?

அநாதை பிணங்கள்-
எத்தனை!?

அலற -அலற -
கைவிட பட்ட-
குப்பை தொட்டி -
குழந்தைகள் -
எத்தனை எத்தனையோ!

நடக்குது இங்கே!

ஓடி போன ஆண்மகன்-
திரும்பி வந்தால் -
வீட்டோட -
சேர்த்து கொள்வதும்!

பெண் மகள்-
திரும்பி வந்தால்-
வீட்டோட சேர்ந்து -
"கொல்வதும்!"

காதல் என்பது-
சரியா?தவறா?-
என்பது கேள்வி அல்ல!

காமத்துக்காக-
காதல் எனும் -
வார்த்தயை பயன்படுத்துகிறார்கள்-
என்பதும் பொய்யல்ல!

எச்சரிக்கையாக இருங்கள்!

காட்டில் இருப்பது-
குள்ள நரிகள்!

நாட்டுக்குள்ளே-
இருக்கிறார்கள்-
காம வெறிநாய்கள்!

No comments:

Post a Comment