Monday 26 December 2011

சகோதரிகளே.....

சந்தி சிரிக்க-
வைக்கிறாய்ங்க-
அந்தரங்கங்களை!

''ஒளி '' பதிவு செய்திட -
துடிக்கிறாங்க -
அந்தரங்கங்களை !

தெருவுக்கு அடிச்சி -
இழுத்துட்டு வருவான்-
''உறவு '' கொள்ளும்-
நாய்களை!

தெருவுல போட்டு -
விக்கிறான் -''உறவு'' கொள்ளும்
பட காட்சிகளை!

இன்றைய உலகின் -
பெரிய பிரச்னை எது!?

சரி எது -
தவறு எது-
விளங்காதது!

ஆடை அலங்கார -
விளம்பரத்துக்கும்!

வருவாள் குறைச்சல் -
இல்லாமல் -
அலங்கோலத்துக்கு!

மானம் காக்க தானே-
ஆடை!

அதை முழுசா போட்டா-
என்ன பிழை!

ஆடை குறைப்பால் -
தெரிவது தேகங்கள் தான்!

அவர்களின் அறிவும் -
திறமையும் அல்ல!

''படுக்கை அறை''-
வரை வந்து விட்டது -
ஆபத்து!

''மத்த 'இடங்களில் -
என்னாகும் என்று -
எப்படி சொல்வது!

பெண்களின் உரிமை -
பாதுகாக்க-
எத்தனை தண்டனைகள்!
எத்தனை வழி முறைகள்!

அதெல்லாம் தடுத்து-
விட்டதா -பெண்களுக்கு
எதிரான வன்முறையை!

படம் எடுப்பான் -
பெண்ணுரிமை ஓங்குக -
என்று!

'ஒழுங்கான ''ஆடை போட்டு-
எத்தனை பேர் -
நடிக்க வைக்கிறாங்க !

ஆட விடுறான்-
''லோ -கிப்புல''!

மானம் மரியாதை-
போயிருச்சி ''லோ''உல!

கதாநாயகன் தேடுவான்-
கலாசார மிக்க -
வாழ்கை துணையை!

பாடல் காட்சியில் -
ஆட விடுவான் -
உள்ளாடையுட!

சினிமா-
மோகத்துல போனா!

அவங்க சீரழிஞ்சி -
போனா!?

கற்பு என்பது -
கண்ணியம் கொண்டது!

ஆகி விட்டதோ-
கடை சரக்கா!?

கண்ணியம் காப்பது தானே-
ஆடை!

அதை குறைக்கும் என்றால்-
அதன் பேர் இல்ல -
ஆடை!

வெள்ளம் வருவதுக்கு-
முன்னால் தடுத்து கொள்ளுங்கள்!

உங்களை ஒளி பதிவு -
செய்யும் முன் மானத்தை -
காத்து கொள்ளுங்கள்!

எடுபடுமா?-
என் பேச்சு -தெரியல!

''பெண்களுக்கு ஆபத்து'--என
செய்தி படிச்சேன்-
பத்திரிக்கையில!

2 comments:

  1. அன்பின் சீனி

    என்ன செய்வது ....... க்லாச்சாரக் காவலர்கள் என்ன செய்கிறார்கள் - பெண்களின் அந்தரங்கங்களை வெளிச்சம் காட்டும் வீணர்களை என்ன செய்யலாம் ............ சிந்தனை கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சீனா!

      உங்கள் பொறுப்பு என்னை-
      வியப்பில் ஆழ்த்துகிறது!

      உடனடி வரவிற்கும் -
      கருத்து இட்டமைக்கும் மிக்க நன்றி!

      Delete