Wednesday 28 December 2011

''அணை''!

அப்ப-
அடிக்கிற கை தான் -
அணைக்கும்பாங்க!

இப்ப-
அணையின் பேரால -
அடிச்சிக்க வக்கிறாங்க!

ஏன் ?-
இந்த மனிதனுக்கு -
இந்த புத்தி !

அதுதான் -
இந்த ஈன புத்தி!

நிலங்களை தான் -
பிரிச்சான்!

நீரையும்ல --
அடைச்சி வச்சிட்டான்!

கடலுல கலக்க -
போற -
நதிய!

நடுவுல தடுத்தா-
என்ன முறை!

தண்ணியை -
''சேர்த்து ''வைக்க தான் -
அணையே!

''சேர்ந்து''இருந்த -
மக்களை!-
பிரிக்க இல்லையே!

கர்நாடக -
காவேரி ஆறு!

ஆந்திரா -
பாலாறு!

கேரளா-
முல்லை பெரியாறு!

தமிழ் நாட்டுக்கு-
ஏன் கொடுக்குறீங்க -
தகராறு!

உலகில் உள்ளவர்கள் -
எல்லாம் ஒரே குடும்பம்தான்!

இதுல எதுக்கு -
கலவரம் தான்!

உலகில் எங்கோ -
இயற்கை சீற்றம் என்றால்-
ஓடி உதவும் நாம்!

ஒரு நாட்டுக்குள்ள -
வீண் பீதியை கிளப்பலாமா!?

மனிதன் -
மன கணக்கு!
பெரும்பாலும் ஆகிடும் -
தப்பு கணக்கு!

அதுக்கு மேல -
''ஒருவனிடம்' -
ஒரு கணக்கு-
இருக்கு!

நாட்டுக்கே பேராபத்து-
மக்கள் தொகையினு-
சொன்னாங்க!

உலகில் ''வளருற '-
நாடுகள் இந்தியாவும்-
சீனாவும்னு -
சொல்றாங்க!

நீயும் -
நானும் -
பிறக்கையில
செலவுக்கு -
கொண்டு வந்தோமா!?
பணங்களை!

உலகில் தான் -
தேடியது - என்பது பொய்யில்லையே!

வெறும் வலையோட -
போற மீனவனும்!

வெறும் வயிரோட -
போற பறவையும் !

''மடி''நிரம்பி திரும்புதே-
அது யாராலே!

அனைத்து உயிருக்கும் -
உணவளிக்க ''ஒருவன்'' -
இருப்பதை மறவாதே!

''படைத்தவன்'' -பகிர்ந்து
அளிப்பவன்!

அவனின் அருளை -
தனக்கு மட்டும் வைத்து-
கொள்பவன் -
"மகா கொடியவன்''!

2 comments:

  1. அன்பின் சீனி

    அருமையான சிந்தனை - கருத்து நன்று - கவிதை நப்ன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சீனா!


      உடனடி வரவிற்கும் -
      கருத்து இட்டமைக்கும் மிக்க நன்றி!

      Delete