Tuesday 22 May 2012

எல்லா புகழும் இறைவனுக்கு-3



என்ன செய்தேன்!
என்- எண்ணங்களை
சொன்னேன்!

பயந்ததுண்டு-
யாரிடமும் பேசிட!

பரிதவித்ததுண்டு
யாராவது- எதனையாவது
சொல்லிட!


கடுப்பானவர்கள் உண்டு-
நான் கவிதை-
எழுதுவதாக-
கேள்விப்பட்டிட!

எங்கோ பிறந்த-
வண்டுகள்-
மகசூல்-
ஏற்படுத்துது!

எங்கெங்கோ
பிறந்த நாம்-(பதிவர்கள்)
எழுதிட தூண்டுகிறோம்-
விருது கொடுத்து!

கொட்டும் மழை
அடையாளம் காணப் படுது!
அது விழும்-
இடத்தைக் கொண்டு!

கழிவில் விழுந்தால்-
கழிவு நீர்!

விளைநிலத்தில் விழுந்தால்-
விளையும் நெல்!

அதுபோலத்தானோ-
மனிதன் வாழ்வோ!?

ஒவ்வொன்றுக்கும்-
ஒரு நிலை உண்டு!
ஒவ்வொரு மனிதனுக்கும்-
தனி சிறப்புண்டு!

மனிதப் படைப்பின்-
நோக்கத்தை-
அறிந்தவர்கள்-
எத்தனை பேருண்டு!
அறிவோம்!
தெளிவோம்!

நாமும் வாழ்வோம்!
பிறரையும்-
வாழச் செய்வோம்!

விருதளித்த சகோதரி
கலைக்கு-
மிக்க நன்றி!

பகிர விரும்பும்-
உறவுகள் பத்து!

சென்னை பித்தன் அவர்கள்
வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்கள்
சதக் மஸ்லஹி அவர்கள்
ராஜி அவர்கள்
மனசாட்சி அவர்கள்
மதாஸ் அவர்கள்
சிட்டுக்குருவி அவர்கள்
ஜோஸபின் அவர்கள்
ரிஷ்வன் அவர்கள்
வைரை சதீஷ் அவர்கள்

தோழர்களே..
எழுதுவோம்!

சமூகத்தை-
எழுப்புவோம்!

அன்பு உறவுகளே-
இந்த விருதினைப்
பகிருங்களேன்!

உங்கள் பிடித்தமானவர்களுக்கு!
மற்றவர்களுக்கு
அறிமுகப்படுத்துவதற்கு!

16 comments:

  1. “எங்கோ பிறந்த-
    வண்டுகள்-
    மகசூல்-
    ஏற்படுத்துது!“

    அருமையான வரி!
    ஒரு கவிதையே இதில் அடங்கிவிட்டது நண்பரே!

    ReplyDelete
  2. //கொட்டும் மழை
    அடையாளம் காணப் படுது!
    அது விழும்-
    இடத்தைக் கொண்டு!

    கழிவில் விழுந்தால்-
    கழிவு நீர்!

    விளைநிலத்தில் விழுந்தால்-
    விளையும் நெல்!//

    மிகவும் பிடித்த வரிகள்

    வாழ்த்துக்கள் - அட விருது எனக்குமா நன்றி நண்பா.

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே...
    விருதுக்கு தகுதியானவர் நீங்கள்..
    இன்னும் மேலும் பல விருதுகள் பெற்றிட
    என் மனமார வாழ்த்துக்கிறேன்..

    எனக்கும் விருதை பகிர்ந்தளித்தமைக்கு
    நன்றிகள் பல...

    ReplyDelete
  4. //பகிர விரும்பும்-
    உறவுகள் பத்து!//

    ஆஹா..
    யாம் பெற்ற இன்பம்
    பெறுக இவ்வையகம் என்ற
    முதுமொழிக்கு ஒரு முன்மாதிரியாய்
    வந்த விருதை சொந்த விருதாக வைத்துக்கொள்ளாமல்
    சொந்தங்களுக்கும் தந்த நண்பா..
    பந்தங்களுக்கும் பகிர்ந்த நண்பா.

    நீவீர்
    மேலும் பல விருதுகள் பெற்று
    வலையுலகில் வலம் வர
    வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  5. விருது வழங்கி கௌரவித்தமைக்கு நன்றி சீனி.புதிய உற்சாகம் பிறக்கிறது!

    ReplyDelete
  6. ஐயோ என்ன நண்பா நம்மலையும் சைட்டால சேர்த்துப்புட்டீங்க....

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் நண்பா மேலும் பல விருதுகள் பெற்று பதிவுலகம் முழுவதும் உனது கவிதைகள் சென்றடைய வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  8. makenthiren sir!
    nantri! sir!

    ReplyDelete
  9. chennai piththan!
    nantri !ayya!

    ReplyDelete
  10. sittu kuruvi!

    ungal karuthukkum-maru mozhikkum
    mikka nantri!

    ReplyDelete
  11. நல்லா கவிதையா எழுதி கலக்கி இருக்கீங்க சீனு வாழ்த்துக்கள் ...


    நிறைய நிறைய விருது பெற்று நல்லா எழுத வாழ்த்துக்கள் ...


    விருது பெற்றவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ப்லோக்ஸ் இப்போ நல்லா இருக்கு

    ReplyDelete
  13. kalai!neengal thantha urchaakathukkum-aatharavukkum-viruthukkum-mikka nantri!

    ReplyDelete