Tuesday 26 March 2013

புகழுக்குரியவனே......!(700வது கவிதை)

வலிகளை-
தருபவனே!

அது தீர-
வழிகளையும்-
வைப்பவனே!

சோதித்து அறிய-
சோதனையை-
தருபவனே!

சாதிக்க வைத்து -
சோதிப்பவனே!

வாட்டிடும்-
வறுமையை-
தருபவனே!

வறுமையில்-
வாட்டம்கொள்ளாமல்-
போராட செய்பவனே!

செல்வத்தை-
தருபவனே!

செல்வசெழிப்பால்-
இறுமாப்பு கொள்ளாதிருக்க-
சொல்பவனே!

ஆட்சியையும்-
அதிகாரங்களையும்-
தன் வசம்-
வைத்திருப்பவனே!

தன் நாடியவர்களுக்கு-
கை மாற -
செய்பவனே!

மடமை நீங்க-
சிந்திக்க-
சொல்பவனே!

அறிவை தந்து-
"ஆடாமல்"-
இருக்க சொல்பவனே!

அத்தனை-
மொழிகளும்-
போற்றிட முடியாதவனே!

அறிவுகளெல்லாம்-
மழுங்கும்-
அளவிற்கு-
புகழ்ந்திட-
முடியாதவனே!

புகழுக்குரியவனே!
பரிபாலிப்பவனே!
ரட்சகனே!

எங்களை-
நீ-
நேர்வழியில்-
செலுத்துவாயாக !

விரோதம்-
குரோதம்-
நயவஞ்சகம்-
நன்றி கெட்டதனம்-
இன்னும் ஏனைய -
தீய எண்ணத்திலிருந்து-
காப்பாயாக!

நல்லவர்களின்-
கூட்டத்தில்-
எங்களையும்-
சேர்ப்பாயாக!

கேட்க -
தெரியவில்லை!
எழுதிட-
வரிகளுக்கும்-
வழியில்லை!

கண்ணீரோடு-
கேட்கிறேன்-
இதை தவிர-
வேறுவழியில்லை!

யா!அல்லாஹ்!

உன்னையே-
வணங்குகிறேன்!
உன்னிடமே!
உதவிகளைதேடுகிறேன்!





11 comments:

  1. நெகிழ வைத்தது கவிதை சகோ.ஹதீஸ்களையே கவிதை வரிகளாக்கி கூடவே பிரார்த்தனையுன் முடித்திருப்பது அருமை.

    யா!அல்லாஹ்!

    உன்னையே-
    வணங்குகிறேன்!
    உன்னிடமே!
    உதவிகளைதேடுகிறேன்!
    ஆமீன்!!!!

    700க்கு வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. sadiqa sako...!

      mikka nantri sako...!
      alhamthilillah!

      Delete
  2. உருக வைக்கும் வரிகள்...

    700 பதிவிற்கு வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
    Replies
    1. ennarumai sako...!
      baalan annan avarkale...!

      thodarum ungal anpirku en nenjaarntha nantrikal!

      Delete
  3. 700 வாழ்த்துக்கள் தோழா

    ReplyDelete
    Replies
    1. muththarasu sako...!

      mikka nantri sako..!

      Delete
  4. 700 படைப்புகள்..!!!
    வாழ்த்துக்கள் சீனி ஐயா.

    ReplyDelete
  5. ’அம்’மென்றால் ஆயிரம் பாட்டாகாதோ!
    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. மிக மகிழ்ச்சியாய் இருக்கிறது சீனி.

    700-வது கவிதைக்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete
  7. அருமை! 700வது படைப்புக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete