Saturday 2 March 2013

யாசகம்...!

"கொடுக்கணுமே"-என
ஒதுங்கி செல்லும்-
பணக்காரன்!

கொடுக்க-
"ஒன்னும் இல்லையே"-என
கலங்கி செல்லும்-
"இல்லாதவன்"!

இவர்களின்-
உள்ளத்தின்-
"உதாசினதையும்"-
"உறுத்தலையும்"-
மனிதர்களின்-
அறிந்தவர்கள்-
யார்!?

உள்ளத்தின்-"
நிலை" அறிந்து-
கூலி கொடுக்க-
இறைவனன்றி -
வேறு யார்!?

3 comments: