Wednesday 10 September 2014

கவிதைகளாக ..!!

அடி வெளுக்கும்
அதிகாலை வானம் !

கடல் விழுங்கும்
மாலைநேர சூரியன்!

ஆழ்கடலின் மௌனம்!

குழந்தைகளின் குறுநகை!

நீளமான  தேசிய நெடுஞ்சாலை !

சிறுவர்கள் கட்டும் மணல்வீடு!

நிலவினை மறைக்கும் மேகம்!

மொட்டை பனைமரம் !

கரைவலை இழுத்தச் சொந்தங்களின்
"காய்த்த"கைகள் !

இப்படியான காட்சிகள்
எனக்குத் தெரிகிறது
கவிதைகளாக !

எனக்கு
கவிதைப்புத்தகங்கள்  கிடைக்காத
தருணங்களிலெல்லாம்!

3 comments:

  1. அருமையான காட்சிகள்! கவிதைகள் ஆனதில் வியப்பில்லை!

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
  3. கண்ணில் படும் காட்சியெல்லாம் கவிதைகளாக!

    நல்ல கவிதை. பாராட்டுகள் சீனு.

    ReplyDelete