Friday 12 September 2014

ஒன்றுக்குள் மற்றொன்று..!!

மரத்தில் விதைகளும்
விதைகளினுள் மரங்களும் அடங்கி இருப்பதுப் போலும் !

சிந்தனைகள் எழுத்தாவதும்
எழுத்திற்குள் சிந்தனைகள் பொதிந்திருப்பதுப் போலும் !

நதியின் கீழ் பூமியும்
பூமியினுள் நீரூற்றுகள் ஓடுவதைப் போலும்!

லட்சியவாதிகளின் தியாகங்களும்
தியாகியாக துணிபவர்களே லட்சியவாதிகளாகுபவர்களைப் போலும்!

எனக்கு நீயும்!

உன்னை கவிதையாகவும்
கவிதைக்குள் உன்னையும்
பார்க்கிறேன் !

     

2 comments:

  1. நல்ல கவிதை சீனி. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete