Monday 15 September 2014

மணல்மேடு !

எத்தனையோ இரவுகள்
உன் மடியில் !

எத்தனையோ கனவுகள்
உன் கதகதப்பில்!

வானம்பார்த்து!

மண்ணில் முகம் வைத்து!

பேசிய கதைகள் !

மிதித்து பேசிய நட்புகள்!

தண்ணீர் சுமந்துச் சென்ற தாரகைகள்!

சாடையில் வீசிச் சென்ற வார்த்தைகள் !

இப்படியாக எத்தனையோ
நினைவுகளை தந்தது!

ஏக்கங்களை தந்தது!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு
மீண்டும் உன் மடி மீது அமர்ந்தபோது!

உணர்வுகளின் அழுத்தங்கள் தாளாமல்!

அவசரமாக தோளில் கிடந்த
துண்டை விரித்து படுத்துக்கொண்டேன்!

கொஞ்சம் மனதும் ஆறுதல் கொண்டது!

தாயோட சேலை வாசத்தில்
நிம்மதியடைந்த குழந்தையைப்போல் !

      

3 comments:

  1. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete