Thursday 18 September 2014

முந்தானை ..!!

வெயிலுக்கு குடையாவாய்!

முகத்திற்கு திரையாவாய்!

கொஞ்சம் மடித்தால் தலையணையாவாய்!

மனதிற்கு பிடித்தவர்கள் நனைந்திட்டால்
துவாளையாவாய்!

சிறுபிள்ளைகள் பிடித்து பின்தொடர வழிகாட்டியாவாய்!

காற்றிலாடி கையாட்டுவாய்!

இப்படியாக
உன்னை ஊரார் அறியவார்கள்!

ஆனால்
முந்தானையே!
பெண்களின் கண்ணீரை
நீ மட்டுமேயறிவாய்!

     

3 comments:

  1. மிக அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமை....

    பல பெண்களின் சோகம் அவர்களின் முந்தானையில் மூடியே வைக்கப்பட்டுள்ளது!

    ReplyDelete