Friday, 4 October 2013

உதாசீனம்..!!

கழுதையைபோல-
உதறி விட்டு-
சென்று இருக்கிறேன்!

எத்தனை முறையோ-
அசிங்கப்பட்டு!

இன்று-
துண்டாடப்ட்ட-
மண்புழுவைப்போல-
துடிக்கிறேன்!

என்னவளே-
உன் -
உதாசீனம் கண்டு!

Thursday, 3 October 2013

மெல்லிடையாள்....!!

நல்லவேளையாக-
உனக்கு-
"இடையே "-
இல்லை!

என்னிடமும்-
"சாவிகொத்து " வைத்திருக்கும் -
அளவிற்கு-
பணமும் இல்லை!

Wednesday, 2 October 2013

சமையல்காரர்!

இவ்வுலகம் -
என்ன -
என் முகத்தில்-
கரியை பூச!

"கரி சட்டிகளே"-
என் உறவுகள்!

தொடுவானம்...!!

கடலுக்கு-
தடுப்பாக-
தெரியும்-
தொடுவானம்!

நெருங்க-
நெருங்க-
அது-
வழி விடும்!

வாழ்வில்-
இன்னல்களும்-
அதுபோலவே!

எதிர்கொண்டால்-
திரும்பி செல்லும்-
வந்தவழியே!

சிரிக்கிறார்கள்.....!!

கவலை இல்லாமல்-
சிலரே-
சிரிக்கிறார்கள்!

கவலையை-
மறைக்கவே-
பலர்-
சிரிக்கிறார்கள்!

பள்ளி தோழிகள்!

பெண்ணொருவர்-
என்னுடன்-
படித்ததாக-
சொன்னார்!

எனக்கு-
நினைவு இல்லை!

மற்றொரு பெண்ணிடம்-
நாம் ஒன்றாக-
படித்தோம்-
என்றேன்!

அப்பெண்ணிற்கு-
நினைவு இல்லை!

இன்னொரு பெண்ணை-
சந்தித்தேன்!
இருவருக்கும்-
படித்தது-
நினைவு-
இருந்தது!

ஆனால்-
பேசிட வார்த்தையில்லை!

உடலின்-
காயங்கள்-
ஆறிடுவதுண்டு!

மனதின் காயங்கள்-
சமயம் பார்த்து-
வலிப்பதுண்டு!



Tuesday, 1 October 2013

காந்தி ஜி அவர்களே...!!

மகாத்மாவே-
நலமா!?

சுதந்திர போராட்ட-
உயிர்த்தியாகிகளெல்லாம் -
சுகமா!?

எப்படி-
நலமாக-
இருப்பீர்கள்!?

நாட்டின் -
நிலையறிந்து-
"வெம்பி "-
இருப்பீர்கள்!!

மற்ற தியாகிகள்-
வெள்ளையனால்-
பலியானார்கள்!

நீங்களோ-
ஒரு துரோகியால்-
"பொலி"-ஆனீர்கள்!

அதனையும்-
முஸ்லிம்கள் மேல்-
பழி போட-
முனைந்தார்கள்!

துப்பப்பட்ட -
தோட்டா(கோட்சே)-
தண்டனைக்குள்ளானது!

துப்பாக்கியும்-
மிச்ச தோட்டாக்களும்-
ரத்த வெறியில்-
அலைகிறது!

பயமில்லாமல்-
இரவில் பெண் -
நடந்தாலே-
முழு சுதந்திரம்-
என்றீர்கள்!

இன்று-
பட்டப்பகலிலேயே-
பச்ச குழந்தைகளையும்-
பிச்சி எறிகிறது-
"நர"மாமிச பட்சிகள்!

மது -
கூடதென்றீர்கள்!

தெரு தெருவுக்கு-
மதுக்கடைகள்-
இருக்கிறது-
போங்கள்!

உங்கள்-
கொள்கைகளை-
மறந்துவிட்டார்கள்!

உங்கள்-
பிறந்த நாளை மட்டும்-
கொண்டாடுவார்கள்!

மிட்டாயெல்லாம்-
கொடுக்கிறார்கள்!

இல்லை-
இல்லை-
"அல்வா"-
கொடுக்கிறார்கள்!