Friday, 14 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (29)

அமைச்சரவை கூட்டம்!

முக்கிய அதிகாரிகளுக்கும்-
அழைப்பு விடுக்கபட்டிருந்தது-
நாடெங்கும்!

ஆதலால்-
கலந்துக்கொண்டிருந்தார்கள்-
புது முகங்களும்!

சொல்ல வேண்டிருந்தது-
அனைத்து விபரங்களையும்!

ராஜ குருவிற்கு -
மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது!

கூட்டம் ஆரம்பமானது!

மன்னர் எழுந்தார்!

''நாட்டின் நலன் விரும்பிகளே!
சேர நாட்டின் சொத்துக்களே!

நான் சொல்லிட போவது!
புதிய சிந்தனைகளானது!

அமைதியாக கேளுங்கள்!
சந்தேகங்களாயினும் கேளுங்கள்!

ராஜ குரு மறைந்ததினால்!
குரு எனும் பதவியை ஒழிக்கிறேன்-
நடந்த சம்பவங்களினால்!

இனி-
அர்ச்சகர்கள் ஆலய பணிகளையே-
கவனித்திடனும்!

ஒற்றர்களெனும் பொறுப்பலிருந்து-
விலக்கிடனும்!

அவையில் சலசலப்பானது!
மன்னரின் கைகள் அமைதி என்றது!

''காரணங்கள் உள்ளது!

சொல்கிறேன்-
உங்களது மனம் பொறுமை காக்க-
வேண்டியுள்ளது!

கடவுளின் நகைகள்-
களவு போயுள்ளது!

அதிர்ஷ்டவசமாக -
நம்மிடமே திரும்பி விட்டது!

விக்ரஹங்கள்-
சோழ,பாண்டிய நாடுகளுக்கும்-
கடத்தப்பட்டுள்ளது!

வடக்கத்திய நாடுகளுக்கும்-
கடத்தப்பட்டுள்ளது!

அரசதந்திர முறையில்-
மீட்க வேண்டியுள்ளது!

இதில் பெரும்வேதனை -
ராஜ குரு கைகளும் உடன்பட்டுள்ளது!''

இடையே-
ஒருவர் கேட்டார்!

''அரசே!
இதில் அரபுக்கள் காரணமாக இருக்கலாம்..!?''

மன்னர்-
பதிலுரைத்தார்!
''அவர்கள் உதவிடவில்லையென்றால்-
கிடைக்காமலே போயிருக்கலாம்..!!''

இன்னொருவர்-
வேறொரு கேள்வி கேட்டார்!

மன்னர் பதிலுரைக்காமல்-
சேதுபத்திரரை பார்த்தார்!

சேதுபத்திரர் பதிலுரைக்க-
எழுந்தார்!

அப்படியென்ன..!? கேள்வி!

''அரபிக்கள் கல்யாணம் செய்ய போகிறார்களாமே!?
என்ன ஜாதி பெண்ணை மணம் முடிக்க போகிறார்கள்..!?-
இதுதான் அக்கேள்வி!

(தொடரும்....!!)


Thursday, 13 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (28)

சேதுபத்திரர் சிரித்துகொண்டே -
கேட்டதற்கு!

அத்ஹமிடமிருந்து-
பதில் வந்தது-
அக்கேள்விக்கு!

''அமைச்கரே!
மன்னர் முஸ்லிமாகவில்லை!
புனிதமாகி விட்டார்!

எங்களுக்கே கிடைக்குமா!?-
அப்புனிதம் -தெரியவில்லை!

மன்னருக்கு கிடைத்ததில்-
மனதோடு மகிழ்ச்சி நிலை!

மக்கத்தில் கிடைக்கும்-
''ஜம் ஜம்''எனும் புனித நீர்!

நோய்களுக்கும் நிவாரணி-
அந்நீர்!

நாங்கள் கடல் பயணம்-
புறப்படுவோமானால்!

கப்பலில் ஏற்றிக்கொள்வோம்-
நிரப்பபட்ட பீப்பாய்களால்!

பயணத்தின்போது-
துறைமுகங்களில்-
குடிதண்ணீர் ஏற்றுவோம்!

அக்குடிநீரில்-
''ஜம் ஜம்''நீரை கொஞ்சம்-
கலந்து குடிப்போம்!

நாங்கள் -
நாடு திரும்பும் வரை!

பாதுகாத்து கொள்வோம்-
அந்நீரை!

எத்தனை வருடமானலும்-
கெட்டு விடாது!

ஐயாயிரம் ஆண்டுகளாக-
சுரந்து கொண்டிருக்கும்-
ஊற்று அது!

அந்நீரில் தான்-
மன்னர் குளித்தார்!

எத்தனையோ பேர்களுக்கு-
கிடைத்திடாத-
பாக்கியத்தை பெற்றார்!

சொல்லிக் கொண்டு-
அத்ஹம் சென்றார்!

சேதுபத்திரர் ஆச்சரியத்துடன்-
கேட்டுக்கொண்டு வந்தார்!

பொழுது விடுகிறது!
சேர நாடு கதற போகிறது!

பூஜையறைக்கு-
துப்புரவாளர் செல்கிறார்!

அலங்கரிக்கபட்ட -
ராஜ குரு உடலை காண்கிறார்!

மோட்சம் அடைந்தார்!
மோட்சம் அடைந்தார்!

நாடெங்கும் பரவியது!
நாடே கலங்கியது!

மடாலயத்தை -
மக்கள் வெள்ளம் சூழ்ந்தது!

காவலர்படை -
அணைகளானது!

சேதுபதியார்!
தளபதியார்!
மன்னர்!

வந்தார்கள்!
வருந்தினார்கள்!

''உங்களையே நம்பினோம்-
ராஜ குருவே!

''மோசம்போனோமே-
ராஜ குருவே!''

மன்னர்-
வாய்விட்டு அழுதார்!

மன்னரை கண்ணீருடன் கண்டதும்-
மக்களும் மன்றாடினார்கள்!

ராஜ குரு மறைவால்!

கைதிகள் விடுதலை செய்யபட்டார்கள்-
மன்னரின் கருணையால்!

விடுதலையானார்கள்-
மாரியும்!
காளியும்!

இறுதி சடங்கும்-
நடந்தது!

இன்னும் சிறிது நேரத்தில்-
அமைச்சரவை கூடவுள்ளது!

(தொடரும்....!!)





Wednesday, 12 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (27)

கிளம்பினார்கள்!
முக்கியமானவர்கள்!

நிலவு -
மேகத்தில் மறைந்து மறைந்து-
நீந்தியது!

நட்சத்திரங்கள்-
என்னவளின் சிரிப்பை-
நினைவூட்டியது!

ரகசிய இடத்தில்-
ராஜ குருவும்-
விஷ்ணுபட்டரும்-
கட்டபட்டுகிடந்தார்கள்!

மன்னருடன்-
சகாக்களை கண்டதும்-
உயிர் பயம் கொண்டார்கள்!

கைகட்டுகள்-
அவிழ்க்கபட்டன!

வைர வைடூரியம் கொண்ட-
சாக்கும் திறக்கப்பட்டன!

ராஜ குரு-
கேவலப்பட்டு நின்றார்!

உயிர்பிச்சை கேட்டு நின்றார்!

விஷ்ணுபட்டர்-
வெடவெடத்தார்!

ராஜ குரு-
முகத்திரையை இண்ணும் கிழித்தார்!

சேதுபத்திரரும்-
தளபதியாரும்-
''உத்தரவுக்காக'' காத்திருந்தார்கள்!

வெட்டி வீச-
தயாராக இருந்தார்கள்!

மன்னர் மனமோ-
இரக்க குணம்!

''அறுத்து எறிந்திட'' சொல்ல-
ஒப்பவில்லை மனம்!

அந்நேரம்!

எதிர்பார்க்காத தருணம்!

ரத்தத்தில் குளித்தார்-
மன்னர்!

ரத்தம்-
ராஜ குருவுடையது!

குத்திய கத்தி-
தளபதியாருடையது!

குத்திய கைகளோ-
விஷ்ணுபட்டருடைது!

ஏன் செய்தாரென-
தெரிவில்லை!

செஞ்ச பாவத்திற்கு-
பிராயச்சித்தமா!?

இல்லை-
செஞ்ச பாவத்தில்-
மேலுமொரு பாவமா!?

ராஜ குருவை குத்தியவர்!

தன்னைதானே-
குத்தி கொண்டார்!

விஷ்ணுபட்டரை-
தளபதியார் தடுத்துக்கொண்டிருந்தார்!

ராஜ குரு -
சரிந்துக்கொண்டிருந்தார்!

மன்னர்-
ராஜ குருவை தாங்கி பிடித்தார்!

தன் மடியில்-
கிடத்தினார்!

''அரசரே!
செய்த பாவத்திற்கு!

ரத்தத்தை சிந்தி விட்டேன்-
உங்களது பாதத்திற்கு!

துரோகம்-
 உங்களுக்கு இழைத்தேன்!

இழிவை நான் அடைந்தேன்!

இறந்த பின்-
என்னுடலை பூஜையறையில் வைத்திடுங்கள்!

விரதத்தில் ''மோட்சம்''அடைந்ததாக மக்களிடம் சொல்லிடுங்கள்!

இக்கோரிக்கை-
என்னை உயர்த்திக்கொள்ள அல்ல!

உங்கள் மேல் மக்கள் சந்தேகம் கொள்ளாதிருக்கன்றி வேறில்ல!''

ராஜ குரு-
சொல்லி முடித்தார்!

உயிர் துறந்தார்!

அத்ஹம் அழைக்கபட்டார்!

விஷ்ணுபட்டரை காப்பாற்ற-
அரபியொருவர் அனுப்பபட்டார்!

தண்ணீர் கொடுக்கப்பட்டது-
தளபதியாருக்கும்-
சேதுபத்திரருக்கும்-
ரத்தத்தை கழுவிட !

மன்னர்-
''முழுக்க'' நனைந்ததால்-
அழைத்து செல்லப்பட்டார்-
குளித்திட!

குளித்து வந்த மன்னர்!

ஆச்சரியமுடன் பார்க்க வைத்தார்!

அரபியர் ஆடை அணிந்திருந்தார்!

அரபியர்போலவே காட்சியளித்தார்!

மன்னர் -
முன்னே சென்றார்!

வைர ,வைடூரிய சாக்கை-
தூக்கி பின் தொடர்ந்தர்-
இருவர்!

ராஜ குரு உடலை கடத்த-
முற்பட்டனர்-
சிலர்!

அப்போது கேட்டார்-
சேதுபத்திரர்!

''மன்னரை முஸ்லீமாக்கி விட்டீரா...!?''

அத்ஹம்-
சேதுபத்திரரை பார்த்தார்!

(தொடரும்...!!)




Tuesday, 11 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (26)

மன்னர்!
தொடர்ந்தார்!

''கழுவிலேற்றினோமானால்-
உயர் ஜாதியினரை!

பாவங்களில்-
பெறும்பாவம் என-
பரப்பி இருக்கிறார்கள்-
மக்களிடையே!

ராஜ குருவிற்கு-
எல்லை மீற -
துணிய வைத்தது எது!?

நாட்டின் -
ரகசிய வழிகள்-
தெரிந்திருந்தது!

நமக்கோ-
ரகசிய வழிகள் தெரியவில்லை!

இதில்-
அரசர்கள் படுக்கையறை கூட-
விதிவிலக்கல்ல!

ஆவல் கொண்டோம்-
ரகசிய வழிகளை அறிந்திட!

''மௌன விரத ''நாடகம் நடத்தபட்டது-
வாய்ப்பு அமைந்திட!

ராஜ குருவை வைத்து-
கதவை பூட்டினோம்!

''ரகசிய கதவு'' திறக்கும் -என
நம்பினோம்!

தப்பிச்செல்ல -
வழி செய்தோம்!

''வழி''யறிய -
தந்திரம் செய்தோம்!

மற்றவைகளை-
அத்ஹமை சொல்வார்!''

மன்னர் சொல்லிவிட்டு-
அமர்ந்தார்!

அத்ஹம் எழுந்தார்!

தொடர்ந்தார்!

''அமைச்சர் பெருமக்களே!

மன்னர் பிறந்தநாளன்று-
எனது  உரையை-
நீங்களெல்லாம் அறிந்தவர்களே!

இன்று -
நான் சொல்ல போவது-
அந்நாளைக்கும் முந்தையது!

இனி வருவது!

இந்நாட்டின் -
கரை சேர்வதற்கு முன்னால்!

சுற்றி வளைக்கப்பட்டோம்-
கடற்கொள்ளையர்களால்!

இது போன்ற தாக்குதல்கள்-
எங்களுக்கு சாதாரணம்!

எதிர்தாக்குதல் கொடுத்து-
கைது செய்தோம்-
அனைவரையும்!

கெஞ்சினார்கள்-
கடற்கொள்ளையர்கள்!

செய்ததெல்லாம்-
ராஜ குரு உந்துதலால்-
என்றார்கள்!

மன்னரை -
காவலர்கள் வாயிலாக சந்தித்தோம்!

மன்னர் -
ஆணைக்கிணங்க விடுவித்தோம்!

வியாபாரத்தை-
ஒதுக்கினோம்!

மன்னர்  வேண்டுகோளினால்-
நாட்டிலுள்ள சதிகளையறிய-
நேரம் ஒதுக்கினோம்!

உள்ளன-
கடற்கரை சத்திரத்திலிருந்தும்-
அரண்மனைக்கு ரகசிய வழிகள்!

அவ்வழிகளை-
கண்காணிப்பதற்காகவே விழித்திருந்தது-
எங்களது கண்கள்!

அதில்-
மன்னரை தாக்க வந்த-
கொலைகாரர்களை தடுத்தோம்!

ராஜ குருவின் -
மன்மத அசிங்கங்களையும் அறிந்தோம்!

''சொர்க்க வாசல்'' மட்டும்-
எங்களுக்கு பிடிபடவில்லை!

அதனால்-
விஷ்ணுபட்டரை தப்பவைக்க வேண்டிய-
நிலை!

தப்பியவர்-
ராஜ குருவை சந்தித்தார்!

ராஜ குருவும்-
வைர , வைடூரியங்களுடன்-
தப்பிக்க முனைந்தார்!

இருவரும்-
கடல் வழி தப்பிக்க முனைந்தார்கள்!

நாம் -
விரித்த வலையில் விழுந்தார்கள்!

அதஹமின் -
விளக்கவுரை நிறைவு பெற்றது!

ஓரிரு அமைச்சர்களை தவிர்த்து!

மற்றவர்களுக்கு-
''இவ்வளவு நடந்ததா..!?''-என
பிரமிப்பே வியாபித்தது!

''ரகசியங்களை-
கசிய விடாதீர்கள்!

மக்களுக்கு -
சஞ்சலத்தை உண்டாக்கிவிடாதீர்கள்!

இண்ணும் -
''வேட்டை ''முடியவில்லை!

சொல்லிவிட்டு கலைத்தார்-
அமைச்சரவையை!

''அத்ஹம்...!!''-
மன்னரின் குரலழைத்தது!

அதில்-
''தேடலொன்று'' இருந்தது!

(தொடரும்....!!)






Monday, 10 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (25)

மன்னர்-
எழுந்தார்!

தொடர்ந்தார்!

''அருமை பிரதானிகளே!

வந்திருப்பது-
நீங்கள் அறிந்த-
முன்னால் மன்னர் அவர்களே!

தன்னிலை விளக்கம்-
சொல்லிடவுள்ளார்!-
சந்தேகங்களை தீர்க்கலாம் -
நீங்களே!''

மார்த்தாண்ட வர்மர்-
எழுந்தார்!

அமைச்சரவைக்கு-
புன்னகை பூத்தார்!

'மன்னராக -
நான் வீற்றிருந்தபோது!

இன்றைய -
பல அமைச்சர்கள் பதவி வகித்தீர்கள்-
அப்போது!

அன்று-
நான் படைதளபதியாக-
இருந்தவன்!

நள்ளிரவில்-
ராஜ குரு சந்திக்க வந்ததால்-
அதிர்ந்தவன்!

இரண்டாம் மன்னர்-
தவத்திற்கு சென்றவர்!

தவத்தில் திளைத்து-
மாயமானார்!

இதனை -
ராஜ குரு சொன்னார்-
என்னிடம்!

இச்செய்தியினை-
நான் சொன்னேன்-
சேதுபத்திரரிடம்!

ஆட்சி -
கைமாறக்கூடிய சூழல்!

இன்றைய -
மன்னர் பிரானோ-
அன்றைக்கு ஆன்மீக தேடல்!

நான்-
சம்மதித்தேன்-
ஆட்சி பொறுப்பேற்க!

சேதுபத்திரர்-
வேண்டுகோளுக்கு இணங்க!

காரணமும்-
உள்ளது!

முதலாம் மன்னர்-
தூரத்து உறவு எனும்-
தகுதி என்னிடமிருந்தது!

ஆனால்-
ராஜ குரு-
படைகளுக்குள்ளேயே-
பகையை மூட்டினார்!

மக்களையும்-
எனக்கெதிராக திருப்பினார்!

மூன்றாம் மன்னர்-
''வருகிறார்'' என்பதையறிந்திருந்தால்-
நானே பொறுப்புதனை கொடுத்திருப்பேன்!

ஆனால்-
நாட்டை விட்டு -
ஓடிட ஆளானேன்!

மன்னர் படையை-
எதிர்க்க சொல்லவில்லை-
என் படையை!

அவர்களும்-
சரணடைந்தார்கள்!

நானும்-
கடலோர படையிடம் விளக்கிட-
அரபிகள் அழைத்து வந்தார்கள்''!

சொல்லி முடித்தார்-
மார்த்தாண்ட வர்மர்!

அத்தனை கண்களும்-
சேதுபத்திரரை பார்த்தது!

''உண்மைதான்'' என்பதை-
அவரது தலையசைப்பு உணர்த்தியது!

மன்னர்-
தொடர்ந்தார்!

'' ஆன்மீக தேடலின் போது!

ராஜ குரு சந்திக்க வந்தார்-
ஒரு நாள் பொழுது!

நான் வர மறுத்தேன்!

ராஜ குரு வார்த்தையால்-
வர சம்மதித்தேன்!

''மார்த்தாண்ட வர்மரால்-
மக்கள் தொல்லையென்றார்!

தேவை ஆட்சி மாற்றம்-
என்றார்!

வர சம்மதித்தேன்!

பல உண்மைகளையறிய முடியாமல்-
பாதுகாப்பு என்ற பெயரில்-
சிறைப்பட்டேன்!''

ராஜ துரோகம் செய்த-
ராஜ குருவை என்ன செய்யலாம்..!?-
மன்னர் கேட்டார்!

அறையெங்கும்-
நிசப்தம் நிலவியது!

''கழுவிலேற்றனும்...!!-''என
ஒரு சப்தம் கேட்டது!

சப்தம் வந்த திசையை நோக்கி-
மன்னர் கழுத்து திரும்பியது!

(தொடரும்....!!)






Sunday, 9 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (24)

பதறியபடி-
தளபதியார் சென்றார்-
மன்னரை தேடி!

மன்னரை கண்டதும்-
காலை பிடித்து அழுதார்-
கதறியபடி!

மன்னர் தேற்றினார்!

அதிசயம்-
அங்கு நடந்தவற்றை-
மன்னரே சொன்னார்!

தளபதியார்-
வியந்துக்கொண்டே மௌனித்தார்!

மன்னர் தொடர்ந்தார்!

''ராஜ குருவை-
கண்ணியமாக வைத்தோம்!

கீழ்நிலைக்கு சென்றால்-
நாம் என்ன செய்வோம்!

நடந்தததும் சரி!
''நடந்திருப்பதும்'' சரி!

மன்னர் -
சாதாரணமாக சொன்னார்!

மீண்டும் சந்திக்க-
சேதுபத்திரருடன் வர சொன்னார்!

கூடினர்!
மன்னர்!
சேதுபத்திரர்!
தளபதியார்!

''இன்னொரு படையை தயார் செய்யுங்கள்!

சிங்கராயருக்கு பக்கபலமாக செல்லுங்கள்!

அதற்கு தலைமையாக தளபதியார் இருங்கள்!

உயிர் இழப்புகளை தவிர்க்க பாருங்கள்!

கூடுமான வரை கைது செய்யுங்கள்!

மார்த்தாண்ட வர்மனை உயிருடன் கொண்டு வாருங்கள்!''

உத்தரவிட்டார் -
மன்னர்!

புறப்பட்டார்-
தளபதியார்!

நாட்கள் சென்றது!

வெற்றி செய்தி எட்டியது!

தளபதியார்-
சொன்னார்!

''அரசே!
மார்த்தாண்ட வர்மரின் படையை-
சிறைப்பிடித்தோம்!

அதில்-
அவரது குடும்பமும் உள்ளடக்கம்!

ஆயினும்-
மார்த்தாண்ட வர்மருடன்-
முக்கிய ஆலோசகர்கள் -
தப்பியோட்டம்!''

கேட்டுக்கொண்டார்-
அரசர்!

தளபதியாரையும்-
சேதுபத்திரரையும்-
மறுநாள் வர சொன்னார்!

அரசரவையில்-
முக்கிய அமைச்சர்கள்-
கூடியிருக்க!

தளபதியாருடன்-
சேதுபத்திரரும் போய்-
பார்க்க!

அதிர்ச்சி!
அதிர்ச்சி!

அரியணையில் மன்னரும்!

அதனையொட்டிய இருக்கையில்-
மார்த்தாண்ட வர்மரும்!!

(தொடரும்....!!)






Saturday, 8 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (23)

''வேறேதும் தகவல்..!?-
மன்னர் கேள்வியெழுப்பினார்!

''அரசே!
மீனவரகள் மது அருந்துவதை நிறுத்திவிட்டார்கள்'!

வீட்டிலிருந்த கடவுள் படங்களை அகற்றிவிட்டார்கள்!

முஸ்லிம்களானதாகவும் தெரியவில்லை!

அரபிக்களுடன் தொழுகையில் ஈடுபடவில்லை!

இதனால் தேசத்தில் வன்முறை நிகழ்மோ என்கிற பயமே என் மனநிலை!

இச்சந்தேகங்களை நீங்கள் தீர்த்து விட்டால் தேவலை.!''

சொல்லி முடித்தார்-
சேதுபத்திரர்!

''அரபிக்கள்-
படையுடன் கலந்தது!
போகும் வழியில் ''பயிற்றுவிப்பதற்கு!''

மீனவர்களுக்கு பயிற்றுவித்தது-
கடல் வழி தப்பிக்க விடாமல்-
மார்த்தாண்ட வர்மன் படையை தடுப்பதற்கு!

மீனவர்கள் படையும்-
தென் பகுதி நோக்கி சென்றுவிட்டது!

சமய விவகாரம்-
அடுத்தது!

நாம்-
ஒரே விக்ரஹாரத்தை வழிபட்டாலும்!

வேறுபடுகிறோம்-
குல தெய்வங்களாலும்!

உறவு முறைகளாலும்!

அவர்களுக்கு-
பிடித்தவற்றை பின்பற்றலாம்!

அரபிக்கள்-
மீனவர் சமூகத்தை கட்டாயபடுத்தியிருந்தால்-
தண்டிக்கலாம்!''

விளக்கி முடித்தார்-
மன்னர்!

சேதுபத்திரரும்-
தளபதியாரும்-
ஆமோதிப்பதுபோல்-
தலையசைத்தனர்!

அரசர்-
தொடர்ந்தார்!

''சொர்க்க வாசல்-
கண்டுபிடிக்க முடியவில்லை!

தந்திரத்தை தவிர-
வழியில்லை!

இதனை-
அத்ஹம் சொன்னது!

கைகூடும் என-
நம்பிக்கையுள்ளது!''

நடத்தபட்டது-
சூழ்ச்சி!

தொடர்ந்தது-
நிகழ்ச்சி!

ஓலைச்சுவடியை-
சீடன் விஷ்ணுவிடம் சேர்ப்பித்தார்!

விஷ்ணு விஷயங்களையறிந்தார்!

விஷ்ணு -
நிச்சயம் தப்பிப்பார்!

ராஜ குருவை-
சொர்க்க வாசல் வழி சந்திப்பார்!

இப்படியான-
எண்ணத்தில்!

நகர் முழுவதும் இருந்தது-
ரகசிய கண்காணிப்பில்!

ராஜ குரு அறையோரம்!

தளபதியார் அதிகவனம்!

நேரம் கடக்கிறது!

நள்ளிரவு வந்தது!

பின்னிரவும் வந்தது!

பாவம்-
தளபதியார் கண்கள் ''அயர்ந்தது''!

உள்ளம் -
தட்டியெழுப்பியது!

துள்ளியெழுந்தவர்-
அறையோரம் காதை வைத்தார்!

உள்ளே சப்தம் இல்லை!
ஒரே நிசப்தம்!

கதவை திறந்தால்-
உள்ளே!
ராஜ குரு இல்லை!

(தொடரும்..!!)