Sunday 18 December 2011

ஒன்றிணைவோம்.....

எனதருமை -
சமூகமே!


கருப்பு-
-வெளுப்பு-
இனங்களை -
இணைத்தது!

ஆண்டான்-
அடிமை-
முறையை-
ஒழித்தது!

உயிர் -
உள்ளவர்கள் -
தானா!?-
பெண்கள் -
சந்தேகமாக!
இருந்தது -
மடமைகாலம்!

அக்காலத்திலேயே!
பெண்ணுக்கு -
உரிமை -
வழங்கியது !

ஓடி -
ஒளிந்தார்கள்-
பெண்குழந்தை-
 பிறந்தால்!

அவர்களையே-
எண்ணவைத்தது-
பெண் குழந்தை-
 பிறந்தது-
தன் பாக்கியத்தால்!-
என!

பதினெட்டாம் -
நூற்றாண்டில்தான்-
பெண்ணுக்கு -
ஓட்டு உரிமை -
கிடைத்தது!

ஆயிரம் -
வருடங்களுக்கு-
முன்னாலேயே-
சொத்துரிமை-
வழங்கியது!

மண்ணை -
ஆள்வதற்கு-
முன்னால்-
மக்களின்
மனங்களை -
ஆண்டது!

கிழக்கையும்-
மேற்கையும் -
சமாதானத்தால்-
இணைத்தது!

இதெல்லாம் -
எது-!?
இஸ்லாம் -
அல்லாமல்-
வேறேது!?

இஸ்லாமிய -
தம்பதிக்கு-
பிறந்து விட்டால் !-
பெற்று
விட்டோமா!?-
பெரும் பேறு!

நாம் என்ன -
செய்தோம்
மார்க்கத்திற்கு -
கைம்மாறு!

பிரிந்த -
உறவுகளையும்-
உடைந்த -
உள்ளங்களையும்-
இணைத்தது-
இஸ்லாம்!

இணைந்து -
வாழ சொல்கிற-
இஸ்லாமிய -
கொள்கையை -
வைத்து கொண்டு!

பிரிந்து-
 போகலாமா!?-
கருத்து வேறுபாடு -
பட்டு கொண்டு!

மார்க்கம் -
என்பது-
கண்ணாடியை -
போன்றது!

அதன் முன் --
எப்படி காட்சி -
அளிக்கிறோமோ-
அப்படிதான் -
காட்டும்!

தன் குடும்ப -
தவறை-
ஒலி -
பெருக்கியில் -
முழங்கமாட்டான்-
எவனும்!

மாசு மறுவற்ற -
மார்க்கத்தை -
மாசு படிய பேச -
அனுமதித்தவன்-
யார்!?

இறைவன் -
சொல்கிறான் -
''ஒரே ஆண் -
பெண்ணிலிருந்து-
படைத்ததாக -
உலகில் உள்ள-
அனைவரையும்!

இன்னும் -
சொல்கிறான்!
உடல் உறுப்புகளை -
போன்றவர்கள் -
ஈமான்-
கொண்டவர்கள்-
 என்றும்!

பங்காளி -
பிரச்சனையை -
பேசி தீர்க்கலாம்!

உறுப்புகளுக்கு -
இடையே-
பிரச்சனையானால்-
எப்படி-
பேசி தீர்க்க!?

''கூடுதல்''-
 விசயங்களுக்காக -
ஏன் இந்த-
 ஊடல்!?

துளிகள் பல -
இணைந்தால்தான்-
கடலெனும் -
சமுத்திரம்!

ஒவ்வொரு -
துளியாக -
பிரிந்தால் -
அதுவே-
அழியும்!

ஒன்றிணைந்தால் தான் -
சமூகம் படைக்கும் -
சரித்திரம்!

பிளவு பட்டால் -
அதுவே தரித்திரம்!

மேடை -
பேச்சாளர்களே!
முடிந்தால்-
ஒற்றுமை எனும்-
கட்டிடத்தின் பக்கம் -
அழையுங்கள் -
மக்களை!

இல்லைஎன்றால்-
ஒற்றுமை எனும்-
கட்டிடத்தை-
 உடைக்க -
வீசாதீர்கள் -
பேச்சு-
என்ற -
கடப்பாறையை!

பார்ப்பதெல்லாம்-
மஞ்சளாக -
தெரியும் -
மஞ்சள் -
காமாலைகாரனுக்கு!

அது உலகின் -
தவறல்ல!

அவன் -
கண்ணின்-
கோளாறு!

''கருத்து வேறுபாடு -
வந்தால்-இறைவனிடமும்
தூதரிடமும் -ஒப்படைத்து
விடுங்கள்--இது இறைமறை!

இறைவன் கட்டளைக்கு-
கட்டுபடுவோம்!
அதுக்காக -
ஒன்றிணைவோம்!

நம்மால் -
இஸ்லாத்திற்கு-
ஒரு லாபமும் இல்ல!

இஸ்லாத்தால்தான்-
நாம் அடைந்த பயன்-
கொஞ்சம் அல்ல!

அழித்து இருக்கிறான் -
இறைவன்-
மாறு செய்த-
மக்களை!

உருவாக்கியும் -
இருக்கிறான்-
இறைவன்-
அவனுக்கு -
கட்டு பட்டு-
நடக்கும்-
மறு சமூகத்தை!

நமக்கு-
மங்கோலியர்கள்-
தெரியும்!

மொகலாய-
 மன்னர்கள் -
தெரியும்!

ஆனால்-
மங்கோலியர்கள் -
வம்சத்தில்தான் -
மொகலாய மன்னர்கள்
-வந்தார்கள்-என
எத்தனை பேருக்கு -
தெரியும்!?

வாழ்வு எனும் -
வெள்ளத்தில் -
ஒற்றுமை
எனும் கயிற்றை-
பிடித்தால் -
நாம்-
வாழலாம்!

இல்லைஎன்றால்-
நாதியற்று-
 பிணமாகலாம்!

உங்களுக்கு-
எது தேவை!

வேற்றுமையா!?-
ஒற்றுமையா!?

2 comments:

  1. Salam bro!
    Netriyil araintar pola solli erukirergal insha allah dua seivom!

    ReplyDelete
    Replies
    1. jaffer !

      ungaludaya muthal -
      varavukkum karuthukkum mikka nantri!

      Delete