Friday 6 April 2012

தீ பொறி..!

பட்டாசு சாலையவும்-
காணாமல் ஆக்கிடும்-
சிறு தீ பொறி!

மடமைதனை எரிப்பவனே-
சீர்திருத்தவாதி!
----------------------
ஊதினால் -
ஒதுங்க-
சோள பொரியா!?

இலக்கை அடையாமல்-
திரும்புபவன்-
லட்சியவாதியா!?
------------------------
உணவுக்கு-
சுவை-
கூட்டு பொரியல்!

வாழ்வே மாறும்-
சிந்தனை பொறியால்!
---------------------------
அனலடிக்கும்-
அக்னி வெயிலு!

இல்லாத மின்சாரத்துக்கு-
கட்டண உயர்வு!
---------------------------
வெளிச்சமே இல்லாம-
தமிழ் நாடு!

விளக்கு மழையில்-
ஐ பி எல்லு!

உருப்படுண்டா-
நாடு!
------------------
பெட்ரோல் பல்குக்கு -
எரி பொருளோட போக-
தடை!

விலை உயர்வால்-
எரியும் வயிரோட-
ஏழைகளால் ஏன் -
பல்கு எரியல!?
--------------------
காதல்-
தீ பொறி!

காமம் -
காட்டு தீ!

இரண்டுக்கும்-
நூலளவே-
இடைவெளி!
-----------------
தீ பொறி-
கண்டு பிடித்தவன்-
ஆதி மனிதனாம்!

அழிவு-
அணு உலை - வைப்பவன்
விஞ்ஞானியாம்!!!?
------------------------
ஒவ்வொரிடமும்-
உண்டு-
அறிவு சுடர்!

சிந்திப்பதை கொண்டே-
வெளிச்சம் தரும்-
அச்சுடர்!
------------------
தீ பிடிக்க தீ பிடிக்க
முத்தம் கொடுடா!!

காட்டு கத்து-
கத்துறா!

கெட்ட ஆட்டம்-
போடுறா!

பொண்ணை பார்த்து-
ஆண் பாடினால்-
ஈவ் டீசிங் கேஸ் போடுறா!!

எழுதுனவன்-
ஆடுனவள்-
பண வரவு!

"பாடுனவனுக்கு"-
வழக்கு பதிவு!!
----------------------

10 comments:

  1. வெளிச்சமே இல்லாம-
    தமிழ் நாடு!

    விளக்கு மழையில்-
    ஐ பி எல்லு!

    உருப்படுண்டா-
    நாடு!

    நல்லாக் கேட்டீங்க நண்பா..!!

    ReplyDelete
    Replies
    1. munaivare!

      ungal varavukkum-
      karithukku mikka nantri!

      Delete
  2. சின்ன சின்ன சீரிய கருத்துகள்.அருமை.

    ReplyDelete
    Replies
    1. asiya !

      ungal muthal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. எனக்குப் பிடித்தது..

    ///ஊதினால் -
    ஒதுங்க-
    சோள பொரியா!?

    இலக்கை அடையாமல்-
    திரும்புபவன்-
    லட்சியவாதியா!?///

    துளித்துளியாய்
    குறுங்கவிதைகள்
    அத்தனையும் அழகு...

    ReplyDelete
    Replies
    1. makenthiran!
      ungal muthal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  4. சீனி கவிதை சர்க்கரை பாகுதான் இதமா பதமா எதார்த்தமாக நாட்டு நடப்பை அலசுது

    ReplyDelete
  5. mana saatchi!

    "mana sAatchikke" -
    pidiththathil enakku makizhchi!

    ReplyDelete
  6. கவிப்பொறி.தீயைத் தேடிய சீனிக்குப் பாராட்டு !

    உப்புமடச் சந்தியில் உங்கள் கவிவரிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சீனி !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      ungal vendukolinanga!
      ezhuthi ullen!

      paarungal !
      pinnoottam idungal!

      Delete