Saturday 13 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(9)

இனி-
ஆசிஷ் கேதானின்-
பேட்டியிலிருந்து-
சில வரிகள்!

இல்லை-
"வடுக்கள்"!

காட்சிகளை-(வீடியோக்கள்)
ஒப்படைத்தேன்!

நாளை-
வெளி வரும்-என்று
ஆவலுடன் -
இருந்தேன்!

நாடே-
அதிரும்!

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு-
நீதி கிடைக்கும்!

என்றெல்லாம்-
எண்ணங்கள்!

ஆனால்-
நடந்தது-
என்னவோ-
வேறு விதங்கள்!

அரசியலாக்கினார்கள்!
அரசியலை -
என் மீதும் -
பூசினார்கள்!

குறைவு-
கொடூரங்களை-
கேட்டபின்பு-
தூங்கிய இரவுகள்!

நிறைய-
தூங்காமல்-
அழுத இரவுகள்!

"துகிலுரித்த "-
புகைப்படங்களை வெளியிட்டு -
பணம் பார்ப்பவர்கள்!-
மத்தியில்!

உயிரையும்-
துச்சமென எண்ணி -
உண்மையை -
வெளிக்கொண்டுவந்த-
ஆசிஷ் இருப்பார்-
நல்லவர்கள்-
நெஞ்சில்!

தெகல்கா இதழ்-
ஒரு புலனாய்வு-
இதழ்!

அதன் தமிழாக்கங்கள்-
தந்துள்ளது-
சில தமிழக -
இதழ்கள்!

ஒரு முறை-
பரபரப்பை-
உருவாக்கியது!

லஞ்சம்-
வாங்கியவரை-
வெளியிட்டு-
மானத்தை வாங்கியது!

பங்காரு லட்சுமணன்-
லஞ்சம் வாங்கியது!

தெகல்காதான்-
"கொடுத்து"-
"படம்"-
பிடித்தது!

(தொடரும்....)

/ பங்காரு லட்சுமணன் பி.ஜே.பி
யை சார்ந்தவர்//



No comments:

Post a Comment