Sunday 2 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (16)

சிப்பாய் உடையில்-
இருட்டிலி௫ந்து-
காளி வெளிப்பட்டான்!

''காலி'' செய்திட-
இடம் பார்த்தான்!

இடைபட்ட நேரத்தில்-
மாறு வேடத்திலிருந்து-
வேறு வேடம்பூண்டு!

மன்னரும்-
மெய்க்காப்பாளர்களும்-
அர்ச்சகர் கோலத்தில்-
சென்றார்கள்-
கோவில் வாயிலில்-
நுழைந்து கொண்டு!

சூழல் ஏதுவானது!
காளியின் கைகள்-
சைகை காட்டியது!

கிடந்தார்கள்-
காளியின் கூட்டாளிகள்!-
கண்கள் கட்டபட்டு!
கை,கால்கள் இறுக்கபட்டு!

அரபிக்கள்-
துவைத்து இ௫ந்தார்கள்!

கொலைகாரர்கள்-
துவண்டு கிடந்தார்கள்!

காளியை-
கோவில் காவலர்-
சந்தேகித்தார்!

காளியின்-
கத்தி குத்தில்-
சரிந்தார்!

சப்தம் கேட்டு-
மக்கள் கூடுவதற்குள்!

காளி மறைந்தான்-
மற்றொரு இருட்டிற்குள்!


கூடிய மக்களை-
கலைத்தார்கள்!

காவலர்களோடு வந்தார்-
தளபதி மார்த்தாண்ட பூபதியவர்கள்!

அத்ஹம்-
தளபதிக்கு முன் சென்றார்!

தளபதி-
கேள்வியோடு பார்த்தார்!

''தளபதியாரே!
கோழி வாங்க வந்தோம்!
வேட்டை நாய்களை வேட்டையாடினோம்!

நம்பீஸ்வரரையும்!
காவலரையும் !
குதறிய காட்டேரிகள்!

எங்களிடம்-
சிக்கி கொண்டார்கள்!

ஒன்று-
வேட்டையாட போயுள்ளது!

அதற்கென-
நாங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது!''

அத்ஹம் -
தளபதியிடம்-
மெதுவாக சொன்னார்!

தளபதி -
அவ்விடம் நோக்கி சென்றார்!

சிக்கியவர்கள்-
கைது செய்யபட்டார்கள்!

அரபிக்கள்-
எதுவும் தெரியாதது போல்-
மறைந்து கொண்டார்கள்!

மீண்டும்-
அதே இடத்தில்-
பதுங்கினார்கள்!

''மற்றொன்றுக்காக''-
எதிர்பார்த்திருந்தார்கள்!

''மாரியண்ணே!
மாரியண்ணே!-என
காளி வந்தான்!

படீர்,படீர்-என
தாக்கபட்டு-
மல்லாந்தான்!

கோவிலுக்கள்-
மணி சப்தம்!

பூஜை முடியவில்லையென-
அத்ஹம் எண்ணம்!

நேரம் செல்ல செல்ல!

மக்களும் வெளியேறினார்கள்-
மெல்ல மெல்ல!

அர்ச்சகராக கோவிலுக்குள்-
சென்றவர்கள்!

மற்றொரு வழியில்-
காவலர்கள் வேடத்தில்-
வந்தார்கள்!

அத்ஹம் எதிர் வந்தார்!

நடந்தவற்றை சொல்லி-
அணுமதிபெற்று சென்றார்!

காளியை-
அள்ளி சென்றார்கள்!

மெய்க்காவலர்கள்!

விடிந்தது!

அரண்மனையில்-
ஆலோசனை நடந்தது!

''அரபுக்கள்-
அதிரடி அபாரம்!

இக்கொலையாளிகள்-
கழுவிலேற்ற தண்டனையாளர்கள்!

ராஜ குரு தயவால்
ஆயுள் தண்டனை பெற்றார்கள்!

மார்த்தாண்ட வர்மா-
ஆட்சியில் வெளியேறி-
மடாலயத்தில் தங்கியுள்ளார்கள்!

அவர்களது வேலை!
ராஜ குரு -
கையசைக்க!
கொலைகாரர்கள்-
 ''கதை'' முடிக்க!

மற்றொரு செய்தி!
நம்ப முடியாத செய்தி!''

இழுத்தார்-
தளபதியார்!

''நம்பவா!?
வேண்டாமா.!?-
முடிவு பிறகு.!
முதலில் சொல்லும்..!-
இது மன்னர்!

''அது...!
''அது வந்து.....!!

(தொடரும்...!)





3 comments: