Friday 31 January 2014

மூன்றாம் சேர மன்னன் !! (15)

''அரசே!
எங்கள் வாள்கள்-
நீதிக்கு எதிராக-
பேசாது!

அநீதியின் முன்னால்-
மௌனிக்காது!

என் சகாக்களை-
சித்தபடுத்தி வைக்கிறேன்!

உங்கள் -
உத்தரவிற்காக காத்தி௫க்கிறேன்!'

சொன்னது-
அத்ஹம்!

தீர்வானது-
திட்டம்!

செய்வது என்ன!?
தவிர்ப்பது என்ன!?

தாக்க வேண்டியது யாரை!?
காக்க வேண்டியது யாரை!?

நம்ப வேண்டியவர்கள் யார் யார்!?
நசுக்க வேண்டியவர்கள் யார் யார்!?

மன்னர் -
திட்டங்களை பகின்றார்!

அத்ஹம்-
அணுமதி பெற்று சென்றார்!

பொழுது சாய்கிறது!
மனங்களில் சில-
எழுகிறது!

நகருக்குள்-
கிராமத்தான்  ஒருவர்!
பல்லாக்கு தூக்குவோர்கள்-
இருவர்!

கோவிலை நோக்கி-
செல்கிறார்கள்!

அம்மூவரை பின் தொடர்ந்து-
ஐவர் செல்கிறார்கள்!


அம்மூவரும்-
கோவிலுக்கு முன்னால்-
அமர்கிறார்கள்!

இருட்டான பகுதியில்-
ஐவர் பதுங்குகிறார்கள்!

அம்மூவர்-
மாறு வேடம்பூண்ட-
மன்னரும்!
மெய்க்காப்பாளர்களும்!

பதுங்கிய ஐவரும்-
அத்ஹமும்!
சகாக்களும்!

புதர் இருட்டின்-
மற்றொரு பக்கம்!

மெல்லிய-
 பேச்சு சப்தம்!

''முந்தைய காரியங்கள்-
''சொங்கைகள்''!

இன்றைக்கு-
 நாம் வேட்டையாட போவது-
''வேங்கைகள்''!

நம்பீஸ்வரரும்!
காவலரும்!
சாதாரண கொலைகள்!

மன்னரும்-
மெய்க்காப்பாளர்களும்!
சுற்றியடிக்கும் சூரர்கள்!

காளி!
நீ!
சென்று வா!

சூழலை அறிந்து வா!''

சம்பாசனண-
நடந்தது!

அத்ஹம்-
காதில் விழுந்தது!

வார்த்தைகள் மட்டுமே-
கேட்டது!

உருவங்கள் கண்டுக்கொள்ளகூடாதென-
இருட்டு  கங்கணம் கட்டி இருந்தது!

ஒரு புறம்-
கொலை வெறி கூட்டம்!

மறு புறம்-
தற்காத்திட நாட்டம்!

இனி-
கொலை வெறி தாக்குதல்-
தடுக்கபடுமா.!?

அல்லது-
தொடுக்கபடுமா.!?

(தொடரும்....!!)



4 comments:

  1. விறுவிறுப்பு அதிகரிக்கிறது!

    ReplyDelete
  2. அடுத்தது என்ன? நானும் காத்திருக்கிறேன்...

    ReplyDelete