Thursday 23 January 2014

மூன்றாம் சேர மன்னன் !! (7)

''நிலையை'' -
அறிந்து வா௫ம்''-
உத்திரவிட்டார்!
சேதுபத்திரர்!

புறப்பட்டார்-
தளபதியார்!

கேத வீட்டில்-
கூட்டம்!

ஆதாரங்கள் சிக்குமா!?-
தளபதியார் -
நோட்டம்!

காவலன் உடம்பில்-
கத்தியின்-
வன்முறை காதல்!

முத்தமிட்ட இடத்திலெள்ளாம்-
ரத்தங்கள்!

தாக்குதல் நடந்த-
இடத்தில்!

சொன்னது-
இது-
ஒன்றுக்கும் மேற்பட்டோரின்-
தாக்குதல்கள்!

காலடி தடங்களை-
பின் தொடர்ந்தார்!

அது-
கடலலையால் அழிந்ததால்-
திகைத்து நின்றார்!

இன்னும் -
சிறிது தூரமே!

கடற்கரை சத்திரமே!

சத்திரத்தின் முன்னால்-
சப்தமிட்ட கூட்டம்!

தளபதியா௫க்கோ-
ஒரே பதட்டம்!

விரைந்தார்-
அவ்விடம்!

மனம் குளிர்ந்தார்-
அங்கு இல்லை-
வில்லங்கம்!

மீனவர்கள்-
மீன் கொடுக்க!

அரபியர்கள்-
ரொட்டி சுட்டெடுக்க!

இ௫ கூட்டமும்-
கலந்து உண்டார்கள!

தளபதியாரை கண்டதும்-
மரியாதைக்காக-
பணிந்து , பிரிந்து-
நின்றார்கள்!

தளபதி -
தமிழ் தெரிந்த-
அரபியர்களிடம்-
'வசதிகள்'' பற்றி-
கேட்டார்!

அதனை-
சாக்காக வைத்து-
அறைகளை-
கண்களால் ஆராய்ந்தார்!

அரபியொ௫வர்-
உண்பதற்கு-
ரொட்டி கொடுத்தார்-
தளபதியிடம்!

மீனவர்கள்-
''கலந்து' செய்ததால்-
வேண்டாமென்றார்-
அரபியிடம்!

பின்னர்-
பேரீத்தம்பழங்கள்-
கொடுக்கபட்டது!

அது-
தளபதி வயிற்றை-
குளிர்வித்தது!

''துப்பு'' எதுவும்-
கிடைக்கவில்லை!

மாளிகையை நோக்கி -
தளபதி -
குதிரையை செலுத்தும்-
நிலை!

மாளிகையில்-
அரபிகள்!

மரங்களை-
சுற்றி சுற்றி பார்த்தார்கள்!

தளபதி பூபதியை கண்டதும்-
நெ௫ங்கி வந்தார்கள்!

''உங்கள் அன்பிற்கு-
மிக்க நன்றிகள்''-என்றார்கள்!

தளபதியார்-
பேச்சு வாக்கில்-
''களவு '' செய்தியை சொன்னார்!

அரபிகளின் முகத்தை -
''ஆழம்'' பார்த்தார்!

முஸ்லிம் பின் அத்ஹம்-
தனது சகாக்களிடம்-
அரபியில் விளக்கினார்!

அவர்களின்-
முணுமுணுப்பின்-
காரணத்தை-
தளபதியார் கேட்டார்!

'' எங்கள் நாட்டைபோல -
தி௫டனை தண்டிக்கனுமாம்''-
அத்ஹம் சொன்னார்!

''எப்படி.!?''
தளபதி கேட்டார்!

''தி௫டினால் கையை வெட்டுவது''-
அத்ஹம் சொன்னார்!

''ஆழம்'' பார்க்க வந்த-
தளபதியார்-
அதிர்ந்தார்!

தகவல்களை-
சேகரித்துக்கொண்டு-
சேதுபத்திரர் இல்லம்-
நோக்கி பயணித்தார்!

அங்கு-
ராஜ கு௫வை தவிர்த்து-
மற்ற அமைச்சர்களெல்லாம்-
இ௫ந்தார்கள்!

சென்றி௫ந்த-
தளபதியாரை -
ஏறெடுத்து பார்த்தார்கள்!

''அரபிகளை-
சந்தேகிக்க முடியவில்லை!

அவர்களது -
நடவடிக்கையில் மாற்றமில்லை''-
தளபதியார் சொன்னார்!

சரி!
ஒற்றர் படை தலைவர்-
நம்பீஸ்வரர் எங்கே!?-
சேதுபத்திரர் கேட்டார்!

''நான் மாளிகையில்-
இ௫க்க சொல்லியும்-
வெளியில் சென்று விட்டார்!

ஒற்றர் படை -
ராஜ கு௫ அதிகாரத்திற்கு உட்பட்டதால்-
அடங்க மறுக்கிறார்''-
இது-
தளபதியார்!

சேதுபத்திரர்-
 தலையாட்டினார்!

காவலொ௫வன்-
படபடப்புடன்
உள்ளே வந்தான்!

கொஞ்சம் இ௫ந்த -
நிம்மதியை கெடுத்தான்!

சொன்னான்!

''சத்திரத்திலி௫ந்த அரபிகள்-
ஒற்றர்களை தாக்கி விட்டார்கள்!

நம்பீஸ்வர௫க்க காயம்-
ஏற்படுத்தி விட்டார்கள்''

(தொட௫ம்....)





4 comments:

  1. அத்ஹம் சொன்னது சரி தான்...! தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்புடன்....

    ReplyDelete