Thursday 2 January 2014

கவிதை பூக்கள்..!!


என்னவளே!
தண்ணீர் குடத்தினை-
நீ!
தூக்கி செல்லும்போதெல்லாம்!

சிந்திக்கொண்டே வ௫ம்-
நீ!
போகும்பாதையெல்லாம்!

எனக்கோ-
மனசெல்லாம்-
சஞ்சலம்!

பூவிடை-
எடை தாங்கவில்லையோ-என்கிற
எண்ணம்!

இன்று -
நான்-
புரிந்தேன்!

ஆம்-
தெளிந்தேன்!

வஞ்சியே!
நீ!
சிந்தி சென்ற இடமெங்கும்-
கவிதை பூக்கள்-
மலர்ந்துள்ளது!

நான்-
பறிக்க பறிக்க-
அது பூத்துக்கொண்டே இ௫க்கிறது!!

4 comments:

  1. அடடா...! சூப்பர்...!

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கவிதை அருமை
    பூங்காவனம் பெருக
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரசனை....

    ரசித்தேன் சீனி.

    ReplyDelete
  4. ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

    ReplyDelete