Sunday 14 June 2015

கவிதையே.!(41-45)


41)
சித்திரவதைச் செய்யும்
சிந்தனைகளை அழித்திடவே
எழுதுகிறேன் !

அழிக்கப்பட்டதிலிருந்து
உயிர்ப்பெறுகிறாயே..!!

"கவிதையே" !
-----------------------------
கவிதையே.!(42)
------------------
உச்சந்தலையில் விழும்
அருவியும்!

உள்ளங்காலில் சுடும்
தீக்கங்கும் !

நீதான்
கவிதையே..!
-------------------------
கவிதையே.!(43)
------------------
என்னைத்தேடி வரும்
யாரிடமும் சொல்லிவிடாதே
கவிதையே !

உனக்குப் பின்னால்
நான் ஒளிந்திருப்பதை..!!
--------------------------
கவிதையே.!(44)
-----------------
நான்
யாரிடமும் பேசாமல்
உன்னுடன்தான் உறவாடுகிறேனாம்
முணுமுணுப்புகள் கேட்கிறது!

நீயே சொல்லு 
கவிதையே!

என்னைப் புரிந்துக் கொள்ளாத
இவ்வுலகத்தை விட!

எனக்குப் புரிந்த 
உன்னோடு உறவாடுவது தவறில்லைத்தானே.!!?
--/-----------------------
கவிதையே.!(45)
------------------
நான் பட்ட காயங்களுக்கு
களும்பாகப் பூசிக்கொள்வது!

உன்னைத் தான்
"கவிதையே"!
-----------------------

2 comments: