Thursday 9 July 2015

இரு பட்டாம்பூச்சிகளின் ஓர் காதல்!


நம்மிருவர் சிறகிலும் இருவேறு ஓவியங்கள்!

அவ்வோவியத்தை நாமே கண்டிட முடியாததில்தான் இயற்கை வைத்திருக்கிறது ஓர் ரகசியம்!

என்மேலுள்ள ஓவிய அழகினை நீ சொல்ல!

உன்மேலுள்ள ஓவிய அற்புதத்தை நான் சொல்ல !

நாமிருவரும் 
சொல்ல ,சொல்ல!

சொல்ல,சொல்ல!

மெல்ல ,மெல்ல!

மெல்ல.மெல்ல!

நம் மனக்குடுவையில் நிரம்பிய வழிகிறது
ஓர் காதல்ரசம்!

மழைக்காலத்தில் ஏழைக்குடிசையில் ஒழுகிடும் மழைநீர்
 பாத்திரத்தை நிரப்பி வழிவதைப் போல்!

4 comments:

  1. வணக்கம்,
    அருமையான வரிகள்,
    வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  2. ரசிக்க வைத்தன வரிகள்! அருமை!

    ReplyDelete
  3. FRIRNDZ FOLLOW MY BLOG

    http://newmodernislam.blogspot.com

    ReplyDelete