Saturday 25 June 2016

சீனி மரைக்கார் .!(சிறுகதை) 4


          சுகமும் ,துக்கமும் கலந்ததுதான் வாழ்க்கை என்று ,யாராவது பாத்திமாவிடம் சொல்வேமேயானால்,"இல்ல ,அடியும்,மிதியும் கலந்ததுதான் வாழ்க்கை "என்றுதான் அவள் சொல்வாள்.ஆரம்பத்தில் சீனி மரைக்கார் அடி தாங்க முடியாமல்,அவள் அம்மா வீட்டிற்கு போய் விடுவாள்.இப்போதெல்லாம் போவதில்லை,இவரின் அடியை விட,அவள் அம்மா வீட்டு சொல்லடிகள் ,குரூரமாக காயப்படுத்துபவைகள்.

      காலங்கள் ஓடியது.கலவர வாழ்க்கையிலும் மூன்றுக் குழந்தைகளுக்கு தாயனாள் பாத்திமா.மூத்தவன் பரக்கத்துல்லா,இரண்டாவது பெண் கதிஜா,மூன்றாவது ஆண் ரபீக்.இப்படியான வேளையில் அவளது மாமியார் மரியம்பு ,படுத்த படுக்கையானாள்.இன்னைக்கோ ,நாளைக்கோ என சில மாதங்களாக கண்ணாமூச்சி ஆடினாள்.

         சீனி மரைக்கார் ராமேஸ்வரம் கிளம்பினார்.கையில் செலவுக்கு பணமில்லாததால் கிளம்ப வேண்டிய சூழல்.மீன் பிடிக்க சென்றால்,கரை வர மூன்று நாட்கள் கூட ஆகலாம்,அவர் கடலுக்குள் படகில் சென்ற இரண்டாம் நாள்,அவரது தாய் மரியம்பு இறந்து விட்டாள்.

    (தொடரும்)

   

1 comment: