Tuesday 5 July 2016

சீனி மரைக்கார் ..!(சிறுகதை) 8


      சீனி போதையில் கிடந்தாலும் ,அவரைத் தேடி அலைவாள் பாத்திமா .முடிந்தளவு வீட்டிற்கு அழைத்து வந்து விடுவாள்.வரும் அவர் பேசும் கெட்ட வார்த்தைகள்தான்,அவளுக்கானது.ஆனாலும் அவரை இவள் பாதுகாக்காமல் இருந்ததில்லை .

     "இவளக் கண்டு ,அந்த பேதியில போவானோட வாழுறா..,இன்னேரம் மத்தவளா இருந்தா.."அத்துக்கிட்டு"போயிருப்பா..." எனவும்,"நல்ல வேள..இந்த புருசன் கெடச்சான்,இல்லனா...இவள புடிக்க முடியாது..."எனவும் ஊரில் பெண்கள் பேசுவதும் உண்டு.

சில ஆண்டுகள் ஓடியது.அதே நிலையில் தான் குடும்பமும் தள்ளாடியது,போதையில் ஆடும் சீனி மரைக்காரைப் போல.பக்கத்து வீட்டு சுபைதாவுடன்,பாத்திமா பேசிக்கொண்டே ,குளிக்க கண்மாயை நோக்கிச் சென்றார்கள்.சுபைதா பேச்சை ஆரம்பித்தாள்.

   "ஏண்டி .ஒம்மவன் பரக்கத்துல்லா போன் பண்ணுனானா..!?

"ஆமாம் அப்ப அப்ப பண்ணுவான்..."

"ஒம்மாப்ள ஏன் இப்படி ,ஒன்ன பாடாபடுத்துறான்..வீணாப் போனவன்..."

  "என்ன செய்ய..!?எந்தல விதி...ஒன்னுக்கு மூணு புள்ளாயாச்சி...அதுகளுக்கு கல்யாணம் காச்சி நடந்துருச்சினா..போதும்.."

"என்னமோமா..ஊரு ஒலகத்துல குடிச்சவனெல்லாம் திருந்தல..இவன்தான் இப்படி இருக்குறாம்மா..."

"சரி வேகமா குளிச்சிட்டு போகனும்..அந்தாளுக்கு போயி சோறு காச்சனும்...பசி தாங்க மாட்டாரு..."என பாத்திமா சொன்னதும்,சுபைதா திகைத்துதான் போனாள்.அவளது நல்ல மனதை நினைத்து.

இருவரும் கண்மாய்க்குள் இறங்கினார்கள்.கொண்டுப் போன அழுக்குத் துணி வாளியை இறக்கினார்கள்.அப்பொழுதுதான் யாரும் எதிர்ப்பார்க்காத நிகழ்வு ஒன்று நடந்தது.

(தொடரும்..)



2 comments:

  1. அருமை
    தொடருங்கள்

    ReplyDelete
  2. அடடா.... என்னவாயிற்று....

    தொடர்கிறேன்.

    ReplyDelete