Sunday 4 December 2016

சின்ன சின்னதாய் ..!(5)

"பாறைக்குள்ளிருக்கும் சிற்பம் சிற்பியின் கண்களுக்கு தெரிவது போல்,வாழ்க்கையின் வெற்றி தன்னம்பிக்கை உள்ளவனுக்கே தெரிகிறது."


"வாழ்க்கைப் பயணத்தில் நல்ல வார்த்தைகளை சிந்தி விட்டு செல்லுங்கள்.ஒரு நாள் நாம் களைத்துப் போய் திரும்பிப் பார்க்கையில்,சிந்திய அவ்வார்த்தைகள்,நல்ல உறவுகளாக நம்மை பார்த்து புன்னகைக்கும் ."


"தூங்கி எழுந்ததும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.ஏனென்றால் தூங்கிய எல்லோரும் எழுவதில்லை."


"உங்கள் குழந்தைகளை செதுக்குங்கள் தவறில்லை,அதற்காக செதுக்குகிறேன் என்ற பெயரில் ,சிதைத்து விடாதீர்கள்."

1 comment:

  1. நல்ல சிந்தனைகள். பாராட்டுகள்.

    ReplyDelete