Friday 16 December 2016

சின்ன சின்னதாய் ..!(7)

"வாழ்தலை அர்த்தமாக்கிக் கொண்டால்,சாவின் மீதும் ஒரு ஆசை வரும்."


காலப் பெருவெளிதனில்
முயற்சியெனும் தூரிகைகளால்
உனது பெயரையும் வண்ணமாக தீட்டிடு!

"கடமை என்பது வேறு.தியாகம் என்பது வேறு.ஆனால் கடமையை செய்து விட்டுதான் ,நம்மில் பலர் தியாகம் செய்ததாக நினைத்துக் கொள்கிறோம் ."


"உழைப்பெனும் அட்சயப்பாத்திரத்தை மறந்து விட்டு,சூதாட்டமெனும் பிச்சைப்பாத்திரத்தை கையில் ஏந்தி அலைகிறார்கள் .நம்மில் சிலர்."

No comments:

Post a Comment