Thursday 28 October 2021

மழைக்காலம்..3

 



     மழை வரும் முன்னே,தும்பிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் வரும் பின்னே..தும்பிகளில் பல பெயர்களைக்கொண்டு அடையாளம் வைத்திருப்போம் எங்களூரில்.கண்ணாடித்தும்பி இது சோம்பேறித் தும்பி ,காலையில்போனால் முள்ளு வேலிகளில் ,நன்றாக தூங்கி கொண்டிருக்கும்,பிடித்தாலும் தூக்கம் கலையாமல் கையில்இருக்கும்.ராஜா தும்பி பார்க்க அழகாக இருக்கும்.இன்னொன்று வயித்து முட்டித்தும்பி,அந்த தும்பியின் வாலின்  தொடக்கத்தில் கொஞ்சம் வயிறு வீக்கமாக இருக்கும்.அதனால் அந்த பெயர் வைத்திருப்பார்கள் போல.அந்ததும்பியை எப்படி பிடித்தாலும்,பிடிப்பதென்பது கடினம்.ஏமாற்றி ஏமாற்றி பறந்து விடும் ,அப்படியே பிடித்தாலும்கையை கடிக்காமல் இருக்காது.இதுவரை சொன்ன தும்பிகளெல்லாம்,ஊருக்குள் இருக்கின்ற முள்வேளிகளிலும்,கருவமரங்களிலும் சாதாரணமாக உலாவும்.


             அந்த தும்பிகளை விட இரண்டு ,மூன்று மடங்கு பெரிய தும்பிகளும் வருவதுண்டு.அவைகள்பெரும்பாலும் ஒடைமர காட்டில்தான்,உலாவும்.சில வேளைகளில் ,வீடுகளிலோ,பள்ளிவாசலிலோ,மாட்டியிருக்கும் டியூப் விளக்குகளில் முட்டிக் கொண்டு கிடக்கும்,அந்த பெரிய வகைதும்பிகளில் ஒன்று மோதிரம் தும்பி ,அதோட வாலின் தொடக்கத்தில் தங்க நிறத்தில் வளையம் போலஇருக்கும்.இன்னொன்று யானைத்தட்டான்,அது நல்ல கருப்பு நிறத்தில் இருக்கும்,அதோட நீளம்,ஆள் காட்டிவிரலில் இருந்து,நம்முடை உள்ளங்கை வரை நீளமாக இருக்கும்.இந்த தும்பிகளை பிடித்துவைத்திருந்தால்,ஏதோ பெரிய சாதனை செய்ததுப் போல,ஒரு மதமதப்பு இருக்கும்.


        மோதிர தும்பியையோ,யானைத்தட்டானையோ,பிடித்தால்,வீட்டிலுள்ள ஓலைக்கொட்டானில்அடைத்து,அது பசித்தால்,சாப்பிடும் என எண்

ணி சிறுவகையான தும்பிகளைப் போட்டு,அடைத்து வைப்போம்.காலையில் எழுந்து பார்த்தால்தான்தெரியும்.தும்பிகள் இறந்து தும்பிகளுக்கு இரையாகியிருக்கும்.


       அப்புறம் வண்ணத்து பூச்சி


(ஞாபகங்கள் தொடரும்…)

1 comment:

  1. தும்பிகளின் வகைகள் அதற்கான பெயர்கள் என பதிவு சிறப்பு. சிறு வயதில் ஒன்றிரண்டு தும்பிகளை பிடித்ததுண்டு. அதற்காக வீட்டில் அடி வாங்கியதும் உண்டு! :)

    ReplyDelete