Tuesday, 4 June 2013

நாளை நமதே!

சகோதரா!
கலங்காதே!
கவலைபடாதே!

சொல்லடிகளால்-
சுருண்டு விடாதே!

நாளைய-
 வெற்றி நமதே!

நன்றாக -
எத்துபவனுக்கே -
இலக்கை  (கோல்)அடையும்-
காற்பந்தாட்ட-
பந்து!

வலிகளையும்-
வேதனையும்-
தாங்குபவனுக்கே-
சேர்ந்திடும்-
வெற்றி வந்து!

Monday, 3 June 2013

ஆணவம் ....!!

ஆணவம் -
கொண்டவன்!

எதிரிக்கு கூட-
வாய்பளிக்காதவன்!

ஆம்-
தன்னை-
தானே-
அழிக்கிறான்!

Sunday, 2 June 2013

தன்மையை கொண்டே.....!!

தங்க குடுவையில்-
ஊற்றபட்டாலும்!

தகர குடுவையில்-
ஊற்றியதானாலும்!

ஊற்றபட்டதின்-
"தன்மையை" கொண்டே-
மரியாதை-
பெறும்!

எத்தனை-
காலம்-
வாழ்ந்தாலும்!

குறைந்த -
காலம்-
என்றாலும்!

"வாழ்ந்த" முறையை-
வைத்தே-
வாழ்கை-
அர்த்தப்படும்!

வரலாறு...!!

தன்-
"வயிற்றுக்காக"-
வாழ்பவன்-
சாமானியன்!

பிறர்-
மானம்-
உரிமை-
காக்க-
போராடுபவன்!

இன்றைக்கு-
வாழும்-
நாளைக்கு-
மாறும்-
வரலாறு-
அவன்!

Saturday, 1 June 2013

சரித்திரம்!

விதைப்பது-
முளைப்பது-
எதார்த்தம்!

அநீதி-
விதைக்கும்போது-
நீதி-
முளைப்பது-
சரித்திரம்!

எதார்த்தங்களை-
யாரும் -
கவனிப்பதில்லை!

சரித்திரங்களை-
உலகம் -
மறந்ததாக -
தெரியவில்லை!

வேணாமாங்க...!!?

"கட்டபட்டவரின்"-
பெத்தவங்க-
மத்தவங்க!

உறவும்-
வேணாமாங்க!

எந்த-
வரவு-
செலவும்-
வேணாமாங்க!

கல்யாணத்திற்கு-
பிறகு-
"அத்தனையும்"-
தனியா-
வேணுமாங்க!

அப்போ-
எதற்கு-
குடும்பத்தோட-
இருப்பவரை-
மணக்குறீங்க!?

வேண்டுமானால்-
அனாதைகளில்-
ஒரு நபரை-
"கட்டி" கொள்ளுங்க!

இனி-
"எல்லாமும்"-
உங்களுக்குதானேங்க..!!







பாத்திரம்!

தாயோட-
மனம்-
பாசத்தின்-
அட்சய பாத்திரம்!

என்னோட-
மனமோ-
பாசத்தை-
யாசிக்கும்-
பிச்சை பாத்திரம்!

அதனை-
சமன் செய்யவா!?-
இறைவன் தருகிறான்-
பெண் மக்களை!

இறைவா!
எப்படி-
நான் எழுதிட-
உன் -
அருட்கொடைகளை...!!