Wednesday 28 September 2011

பொய்யானவைகள்..!




குழந்தை பருவம் -
சொன்னது-
கருவறை -
நிலையில்லை-
என!

பள்ளி பருவம் -
சொன்னது-
குழந்தை பருவம் -
பொய் -என!

முதல் காதல் -
சொன்னது-
இளமை காலம் -
இனிமையாக கழியாது-
என-!

இழந்த காதல் -
சொன்னது-
'சேர்ந்து'விட -
நேசம் மட்டும் -
போதாது -
என!

திருமண வாழ்வு -
சொல்கிறது-
பெத்தவங்க முடிவு -
தவறாக-
இருக்காது-
என!

மனைவியை-
 பிரிந்த நேரம் -
சொன்னது-
பணம் மட்டும்-
மகிழ்ச்சியை -
தராது-
என!

விட்டு செல்லும் -
சோகம் சொன்னது-
கூத்தடிக்க மட்டும் -
கூட்டாளிகள் அல்ல-
என!

பத்திரிக்கைக்கு -
அனுப்பி -
திரும்பிய -
கவிதை-
 சொன்னது!
முதல் முயற்சி -
தோல்வி தான் -
என!

கடந்து செல்லும் -
'சவ' ஊர்வலம் -
சொன்னது!-
நடப்பவை -
எல்லாம்-
நிரந்தரம் -
இல்லை- 
என!

No comments:

Post a Comment